நாராயணபுரம் ஏரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் வருவதற்கு வடிகால் வாய்க்கால் அமைக்கும் எப்போது முடியுமென்றே தெரியவில்லை. கால்வாயை ஒட்டியிருந்த சிமென்ட் சாலைகள், இரும்பு கம்பிகள் வெளியே தள்ளாடிய நிலையில், பழுதடைந்து காணப்பகிறது. குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளிக்கரணை சாலையில் பயணம் செய்வது உயிருக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது என அந்த பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த பணி எப்போது முடியும்?
சூறாவளியால் பாதிப்படைந்த பகுதிகள்
நகரின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், சதுப்பு நிலத்திற்கு அருகில் அமைந்துள்ள பள்ளிக்கரணை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் போன்ற பகுதிகள் கடந்த ஆண்டு நவம்பரில் 'மச்சாங்' சூறாவளியின் போது கடுமையான வெள்ளத்தை சந்தித்தன. இது உறுதியான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை தூண்டியது.
சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க அரசாங்கம் முடிவு
பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, கீழ்கட்டளை, பள்ளிக்கரணை உள்ளிட்ட நகரின் தென்பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீர், சதுப்பு நிலத்தில் பாய்ந்து, ஒக்கியம் மடு, கோவளம் கிரீஸ் வழியாகச் சென்று, பக்கிங்காம் கால்வாயில் கலப்பதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, பருவமழையின் போது நீர் தேங்குவதைத் தடுக்க சாத்தியமான இடங்களில் சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க அரசாங்கம் முடிவு செய்தது.

தாமதமாகி வரும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி
மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கைத் தடுத்து பள்ளிக்கரணை ஈரநிலத்தை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்க இணைப்பு பாலத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. நாராயணபுரம் ஏரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் வருவதற்கு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக்கரணையில் சாலை பணி தாமதமாகி வருகிறது. இந்த முடிக்கப்படாத திட்டமானது போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக மழைக்காலங்களில் சாலை இடிந்து விழும் அபாயம் உள்ளது.
44 கோடி மதிப்பிலான திட்டம்
நாராயணபுரம் ஏரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட 900 மீட்டர் வடிகால் வாய்க்கால் அமைப்பதை மையமாக வைத்து பள்ளிக்கரணையில் சாலை பணி நடந்து வருகிறது. 44 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், மாநில நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின் காரணமாக தாமதத்தை எதிர்கொண்டது.
1,200 கன அடி தண்ணீரை எடுத்துச் செல்லும் திறன்
நீர்வளத் துறை (WRD) 900 மீ கால்வாய்க்கான பணியை மிகவும் தாமதத்திற்குப் பிறகு செப்டம்பர் இறுதியில் தொடங்கியது. 44 கோடி மதிப்பிலான திட்டம், மாநில நெடுஞ்சாலைத் துறையின் அனுமதிக்காக காத்திருப்பு காரணமாக தாமதமானது. வினாடிக்கு சுமார் 1,200 கன அடி தண்ணீரை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த சேனல், அண்டை பகுதிகளில் வெள்ளத்தைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவலை தெரிவித்து வரும் பொதுமக்கள்
காலதாமதத்தால் கடுமையான போக்குவரத்து இடையூறுகள், சாலை குறுகுதல் மற்றும் பருவமழையின் போது வெள்ளம் ஏற்படுவது பற்றிய கவலைகள் உள்ளன. கட்டுமானப் பகுதியில் உள்ள பெரிய பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதால், சாலை இடிந்துவிழும் அபாயம் உள்ளதாக குடியிருப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். கால்வாயை ஒட்டியிருந்த சிமென்ட் சாலைகள், இரும்பு கம்பிகள் வெளியே தள்ளாடிய நிலையில், பழுதடைந்து காணப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
உயிர் போகும் அபாயம் கூட உண்டு
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலை இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பள்ளிக்கரணை, ரமணியம் ஓசியன் டியூ குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் வீரராகவன் கூறுகையில், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கினால் நிலைமை மோசமாகும். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி, விபத்து அபாயமும் உள்ளது. இதை விரைந்து முடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் என்ன ஸ்பெஷல்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையான நீர்த்தேக்கமாக செயல்படுகிறது, மழைநீரை உறிஞ்சி, மழைக்காலத்தில் மெதுவாக வெளியேற்றுகிறது, இதனால் கடுமையான வெள்ள அபாயத்தைத் தணிக்கிறது. இருப்பினும், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு போன்ற ஆக்கிரமிப்புகள் அதன் முக்கிய செயல்பாட்டை கணிசமாக பாதித்துள்ளன. 1960 இல் 5,500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலத்தின் பரப்பளவு 2013 இல் 580 ஹெக்டேராக சுருங்கிவிட்டது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.



Click it and Unblock the Notifications





