லாபம் குறைவாக வருவதால் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் செல்லும் விமான சேவைகள் அவ்வப்போது நிறுத்தப்படுகின்றன. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. சில மாத இடைவெளிக்கு பிறகு புதுச்சேரியிலிருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே மீண்டும் விமான சேவைகள் அக்டோபர் 27 முதல் தொடங்க உள்ளது!
விமான சேவைகள் எப்போது துவங்கும் என எதிர்பார்த்த மக்கள்
முன்னதாக, விமானங்கள் கிடைக்காதது மற்றும் புதிய விமானங்களை வழங்குவதில் தாமதம் ஆகியவற்றைக் காரணம் காட்டி, ஜூலை 1 முதல் குளிர்கால அட்டவணைக்கு விமானச் செயல்பாடுகளுக்கான திட்டங்களை விமான நிறுவனம் ஒத்திவைத்தது. மார்ச் 31-ம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து, புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
குறைந்த வந்த பயணிகளின் எண்ணிக்கை
ஆதாரங்களின்படி, ஹைதராபாத் மற்றும் பாண்டிச்சேரிக்கு இடையேயான விமானங்கள் வார நாட்களில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலும், வார இறுதி நாட்களில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரையிலும் இருக்கும். இருப்பினும், பாண்டிச்சேரி மற்றும் பெங்களூரு இடையே விமானங்களில் ஆக்கிரமிப்பு 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால், இனி அவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய புதுச்சேரி அரசு
இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
புதுச்சேரி-ஹைதராபாத், புதுச்சேரி-பெங்களூரு அக்டோபர் 27 முதல்
அதன்படி, இண்டிகோ ஏர்லைன்ஸ் புதுச்சேரி-ஹைதராபாத் மற்றும் புதுச்சேரி-பெங்களூரு வழித்தடங்களில் அக்டோபர் 27 முதல் விமானச் சேவையைத் தொடங்க உள்ளது. இது குறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது, "புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமான சேவை ஹைதராபாத், பெங்களூருவுக்கு மீண்டும் துவங்கப்பட உள்ளது. அடுத்ததாக ஏர்ஷபா நிறுவனம் சார்பில் கொச்சி, தூத்துக்குடி, திருப்பதி, சேலம், கோவை, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளுக்கும் சிறிய ரக விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
ஹெலிகாப்டர் சேவையும் விரைவில் துவக்கம்
தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்து ஹெலிகாப்டர் சேவையையும் துவங்க உள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தை பட்டானூர் அருகே 45 டிகிரி கோணத்தில் சிறிது மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான நிலத்தை எடுப்பது தொடர்பாக சுற்றுலா துறை அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசியுள்ளனர். தற்போதுள்ள ஓடுதளத்தை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புதுச்சேரி சுற்றுலா மேம்படும் என எதிர்பார்ப்பு
புதுச்சேரி அரசு விமான நிலைய பாதுகாப்பு, தீயணைப்பு சேவைகள் மற்றும் மலிவு விலையில் விமான எரிபொருள் வழங்குவதில் பங்களித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸின் நுழைவு இப்பகுதியில் இருந்து விமான நடவடிக்கைகளை புதுப்பிக்கும், மிகவும் தேவையான இணைப்பை வழங்கும் மற்றும் உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





