Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை இ.சி.ஆர் சாலையில் வரப்போகும் புதிய 10 வழி விரைவுச்சாலை – இனி டிராஃபிக் இருக்காது!

சென்னை இ.சி.ஆர் சாலையில் வரப்போகும் புதிய 10 வழி விரைவுச்சாலை – இனி டிராஃபிக் இருக்காது!

சென்னையில் எத்தனை மேம்பாலங்கள், விரைவுச்சாலைகள், புறவழிச்சாலைகள் இருந்தாலும் அவ்வப்போது டிராஃபிக் பிரச்சினையால் நாம் சிரமப்படுகிறோம்! அந்த வகையில், இப்போது விரைவுச்சாலை எதுவும் இல்லாமல் அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வது சென்னை கிழக்கு கடற்கரை சாலை எனப்படும் இ.சி.ஆர் சாலை தான். ஆனால் தற்போது அதற்கு தீர்வு கிடைத்துவிட்டது. ஆம்! மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் விரைவில் துவங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றது!

மகாபலிபுரத்திலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் சாலை

சமீபகாலமாக, தமிழக அரசு தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மகாபலிபுரத்திலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் சாலை, மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்க போகிறது. வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்க, மகாபலிபுரம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் போன்ற சுற்றுலா மற்றும் தொழில்துறை மையங்களுக்கு இடையே போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த சாலை எடுத்துக்காட்டுகிறது.

வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்குகளின் போக்குவரத்தை எளிதாக்கும்

மகாபலிபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி வரையிலான சாலையை மேம்படுத்துவது தொடர்பாக, தமிழகத்தின் இணைப்பை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு உள்கட்டமைப்பு முயற்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மகாபலிபுரத்தை காட்டுப்பள்ளி துறைமுகத்துடன் இணைக்கும் சாலையானது வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்குகளின் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கம் கொண்டது.

lanegreenexpresswayiscominginchennai1

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்

இந்த திட்டம், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மாநிலத்தின் பரந்த கவனத்தின் ஒரு பகுதியாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு, சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) போன்ற முக்கிய சாலைகளின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இது போன்ற மேம்படுத்தப்பட்ட சாலைகள் பொருளாதார மேம்பாட்டிற்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, மேம்பாலங்கள் மற்றும் பிற தொடர்புடைய உள்கட்டமைப்புகளுக்கான திட்டங்கள் அவற்றை நிறைவு செய்கின்றன.

மாமல்லபுரம் - மீஞ்சூர் இடையே பெரிய வெளிவட்டச் சாலை

காட்டுப்பள்ளி துறை முகத்தை மனதில் வைத்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே 100 அடி சாலை, இருளியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலூர் - மீஞ்சூர் இடையே சென்னை புறவழிச்சாலை உட்பட பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் பயணிகள் கடுமையான டிராபிக் ஜாமை எதிர்கொள்கின்றனர். இந்த போக்குவரத்துச் சுமையைக் குறைக்க, குறிப்பாக சரக்கு வாகனங்கள் எளிதாக இந்த சாலையில் செல்ல மாமல்லபுரம் - மீஞ்சூர் இடையே பெரிய வெளிவட்டச் சாலை அமைக்க, அரசு முன்மொழிந்தது.

lanegreenexpresswayiscominginchennai coming

விரைவில் நீங்கள் பயணிக்கலாம்

முதல் கட்டமாக ரூ. 2,673 கோடி செலவில் சாலைப் பணிகள் துவங்கப்படும். இந்த சாலையின் முதல் கட்டம் ஜனவரி மாதம் திறக்கப்படும். கட்டுமானப் பணிகளை தாமதமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால் 24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதலால் நீங்கள் கூடிய விரைவில் விரைவுச்சாலையில் பயணிக்கலாம்!

More News

Read more about: chennai tamilnadu news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+