எப்போதுமே முழுக் கொள்ளளவில் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயங்கும் தமிழகத்தின் பிரதான பாதைகளில் திருநெல்வேலி-சென்னை பாதையும் ஒன்று. எத்தனை ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கினாலும் வரிசையில் காத்து கிடக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். சென்னை-நெல்லை வந்தே பாரத் அறிமுகப்படுத்தியதில் இருந்து பலத்த வரவேற்பை பெற்று முழு கொள்ளளவில் இயங்கி வரும் இந்த சேவையில் இப்போது கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. 8 பெட்டிகளாக இயங்கி வந்தே நெல்லை-சென்னை வந்தே பாரத் தற்போது 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது! இந்த முடிவை தமிழக மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்!
பயணிகளிடம் கிடைத்த அமோக வரவேற்பு
தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை அடையும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயில் சேவை தொடங்கியது முதல் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 530 பேர் பயணிக்க முடியும்.

பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. காத்திருப்போர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. எனவே, எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மகிழ்ச்சியுடன் பயணம் செய்யும் பயணிகள்
இந்த ரயில் அதன் பயணத்தின் போது விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் சந்திப்பு மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் நிற்கிறது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி-சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 20666/20665) ரயிலை அதிகரிப்பதில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. ஜனவரி 15 முதல், இந்த ரயில் முந்தைய 8 பெட்டிகள் கொண்ட அமைப்பை மாற்றியமைத்து, மேம்படுத்தப்பட்ட 16 பெட்டிகள் கொண்ட கலவையுடன் இயக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்ட பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
IRCTC இணையதளம் மூலம் ஆன்லைன் முன்பதிவு
· IRCTC இணையதளத்தைப் பார்வையிடவும்.
· உங்கள் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
· புறப்படும் மற்றும் சேருமிட நிலையங்களை உள்ளிட்டு பயணத் தேதியைத் தேர்வு செய்யவும்.
· கிடைக்கக்கூடிய ரயில்களின் பட்டியலிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸைத் தேர்ந்தெடுக்கவும்.
· உங்களுக்கு விருப்பமான வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் (எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் அல்லது நாற்காலி கார்).
· பயணிகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து, கட்டணத்தைத் தொடரவும். பணம் செலுத்தியதும், மின் டிக்கெட்டைப் பெறுவீர்கள்.
IRCTC மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்தல்
· உங்கள் ஸ்மார்ட்போனில் IRCTC Rail Connect பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
· டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இணையதளத்தில் உள்ள அதே படிகளைப் பின்பற்றவும்.
நெல்லை-சென்னை வந்தே பாரத் டிக்கெட் கட்டணம்
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் பின்வருமாறு: ஏசி சேர் கார்: ரூ.1665 மற்றும் எக்ஸிகியூட்டிவ் சேர் கார்: ரூ.3055.



Click it and Unblock the Notifications



