வார இறுதி நாட்களிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பெரிய குதிரை கொம்பாக தான் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் புதுச்சேரிக்கு நெரிசல் இல்லாமல் பேருந்து கிடைப்பது இல்லை. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகம் வார இறுதி நாட்களில், சென்னையிலிருந்து புதுச்சேரி, திருச்சி, சேலம், கோவை, மதுரை உட்பட தமிழகத்தின் பிற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது!
சென்னையிலிருந்து சகஜமாக பேருந்துகள் கிடைப்பது இல்லை
சென்னை தமிழகத்தின் தலைநகராக மட்டுமல்லாமல், வந்தாரை வாழ வைக்கும் மாநகராக பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதால், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னையில் தங்கி வேலை செய்வோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. வார இறுதி நாட்களில் இந்த மக்கள் பலரும், சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர் நோக்கி பயணிக்கின்றனர். ஆனால், அனைவர்க்கும் அமர்ந்து செல்லக்கூடிய அளவில் பேருந்து வசதி கிடைப்பது இல்லை. இது எப்போதுமே ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது.

வார இறுதிகளில் பேருந்து எண்ணிக்கை அதிகாரிக்க முடிவு
வார இறுதி நாட்களில், ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள், இதனால் போக்குவரத்து சேவைகளுக்கான தேவை அதிகரிக்கிறது. இது முதன்மையாக சென்னையில் தங்கி பணிபுரியும் மக்கள், மாணவர்கள் மற்றும் தங்கள் சொந்த ஊர்களில் நேரத்தை செலவிட விரும்பும் குடும்பங்களால் நிரம்பி வழிகிறது. இந்த அதிகரிப்பை சமாளிக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC), மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 28 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) வார இறுதிகளில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1, 2025 ஆகிய தேதிகளில், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து மொத்தம் 556 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதே சிறப்பு பேருந்துகள் வரவிருக்கும் வார இறுதிகளிலும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது?
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (KCBT):
இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்: மொத்தம் 485 (வெள்ளிக்கிழமை 245, சனிக்கிழமை 240)
எந்தெந்த ஊர்களுக்கு: மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி
கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT):
இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்: மொத்தம் 51
எந்தெந்த ஊர்களுக்கு: திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு, புதுச்சேரி
மாதவரம் பேருந்து நிலையம் (MMBT):
இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்: மொத்தம் 20
எந்தெந்த ஊர்களுக்கு: மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஓசூர், பெங்களூரு, புதுச்சேரி
முன்பதிவு செய்யவும் வசதி
பயணிகள், www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது TNSTC மொபைல் செயலியிலோ முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிடலாம். மேலும், அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications



