நீலம்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் இந்த கொனொல்லி பிளாட் எனப்படும் பழமையான தேக்குப்பண்ணை தோட்டம் அமைந்துள்ளது. மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டத்துக்கு ஆங்கிலேய ஆட்சியின் போது மலபார் பிரதேச கலெக்டராக ஆட்சி செய்த ஹெச்.வி. கொனல்லி என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
19ம் நூற்றாண்டின் பாதியில் ஹெச்.வி. கொனல்லி மற்றும் உதவியாளரான சந்து மேனன் ஆகியோரது முயற்சியில் இந்த தேக்குமர தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மெட்ராஸ் பிரசிடென்சி மாநிலத்தின் வனத்துறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக துவங்கப்பட்ட இந்த ‘மரப்பண்ணை’திட்டம் பின்னாளில் இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களுக்கான மரத்தேவைகளை நிறைவேற்றிய முக்கியத்துவத்தையும் பெற்றது.
வடபுரம் என்ற இடத்துக்கு அருகிலுள்ள இந்த தேக்கு தோட்டத்திற்கு அருகிலேயே ‘அரசு மரசேகரிப்பு கூட’மும் அமைந்துள்ளது. சாலியார் ஆற்றின் கரையில் உள்ள இந்த தோட்டத்திற்கு பயணிகள் ஃபெர்ரி எனப்படும் சொகுசுப்படகுகள் மூலம் ஆற்றைக்கடந்து சென்றடையலாம். அமைதியான ஒரு இயற்கைச்சூழலை தரிசிக்க விரும்புவர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம் இந்த ஹெச்.வி. கொனல்லி தேக்கு தோட்டம் ஆகும்.