நிஜாம் சாகர் டேம் எனப்படும் இந்த அணை நிஜாமாபாத் மாவட்டத்தில் மஞ்சிரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு கோதாவரி ஆற்றின் பல துணை ஆறுகளில் ஒன்றாகும்.
இந்த அணைப்பகுதி மாநிலைத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 145 கி.மீ தூரத்தில் உள்ளது. நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள அச்சம்பேட் மற்றும் பஞ்சபல்லி என்ற இரண்டு ஊர்களுக்கிடையே இது அமைந்துள்ளது.
மிகப்பெரிய பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நிஜாம் சாகர் அணையானது 3 கி.மீ நீளத்தை கொண்டதாக இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் எழும்பியுள்ளது. இந்த பிரம்மாண்ட அணைத்தேக்கம் நிஜாமாபாத் மாவட்டப்பகுதியின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே கட்டப்பட்டுள்ளது.
14 அடி அகலமுள்ள ஒரு போக்குவரத்து சாலையும் இந்த அணைமீதே அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தமடைந்து வருகிறது. இதன்மேலிருந்து சுற்றிலுமுள்ள எழிற்காட்சிகளை நன்றாக பார்த்து ரசிக்க முடிவது வேறெங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.



Click it and Unblock the Notifications