நிஜாமாபாத் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் சாரங்காபுரம் எனும் சிறு நகரத்தில் இந்த சாரங்காபுரம் ஹனுமான் கோயில் அமைந்துள்ளது. இந்த சாரங்காபுரம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா நகரமும் ஆகும்.
நாட்டிலுள்ள முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுவதால் இந்த ஹனுமான் கோயில் யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த கோயிலில் ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
425 வருடங்களுக்கு சாம்ராட் ராமதாஸ் குரு இந்த கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டியதாக சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்த கோயில் ஏராளமான பக்தர்களையும் பயணிகளையும் நாடெங்கிலுமிருந்து ஈர்த்து வருகிறது.
செவ்வாய்கிழமை ஆஞ்சநேயரை வணங்க உகந்த நாளாக கருதப்படுவதால் அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர். தினமும் மாலை வேளையில் விசேஷப்பூஜையும் இந்த கோயிலில் செய்விக்கப்படுகிறது.