பர்வனூவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எடவிந்த்ரா கார்டன்ஸ் என பிரபலமாக அழைக்கப்படும் மொகல் கார்டன்ஸ் ஹரியானாவில் உள்ளது. பாட்டியாலாவின் அரசன் எடவிந்த்ரா சிங் என்பவரின் பெயர் இந்த இடத்திற்கு சூட்டப்பட்டது.
இது பிரபல கட்டிட நிபுணரான நவாப் ஃபிடாய் கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அவர் பாகிஸ்தானிலுள்ள பிரபலமான பாதுஷாஹி மசூதியை கட்டிய நிபுணர் ஆவார். இந்த அழகான தோட்டத்தில் ஒரு சிறிய மிருக காட்சி சாலையும், ஒரு உணவகமும் உள்ளது.
இது தவிர, இங்கு ஒரு ஜப்பானிஸ் கார்டன், செடி வளர்ப்பு நிலையம், புல்வெளி ஆகியவை உள்ளன. இந்த தோட்டம் ஏழு தளங்களாக பிரிக்கப்பட்டு அனைத்தும் சமச்சீராக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மீது பரந்து விரிந்துள்ள, தற்போது பின்ஜோர் பூங்கா என்றும் அறியப்படுகின்ற இந்த தோட்டம் 1966 லிருந்து ஹரியானா சுற்றுலா துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
பிரபல சீக்கிய திருவிழாவான பைசாகி மற்றும் பல்வேறு விழாக்கள் நிகழ்சிகள் இங்கு நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மா விழா (Mango Festival) இங்கு நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications