மகா ராணா பிரதாப் சாகர் அணை பீஸ் நதிக்கு குறுக்கே 450 மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 25 சர்வதேச ஈரநில தளங்களில் ஒன்றாக இது ராம்சார் மாநாடு மூலம் அறிவிக்கப்பட்டது.
புகழ்பெற்ற இந்திய வீரர், மகா ராணா பிரதாப்பின் பெயரை இந்த அணைக்கு வைத்துள்ளனர். மேலும், பாங் அணை ஏரி அல்லது பாங் நீர்த்தேக்கம் என்று அறியப்படும் இது, 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் இப்பகுதியில் பல பறவைகள் வந்து தங்கியதால், இதை ஒரு வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தனர்.
நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும் 220 பறவையினங்கள் சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வருபவையாகும். சுர்கர்ப், கிரேன்கள், மற்றும் பின்டேல்ஸ் போன்றவை சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வந்த குறிப்பிடத்தக்க பறவையினங்களாகும்.
சாம்பார், குறைக்கும் மான், காட்டு பன்றிகள், மற்றும் சிறுத்தைப்புலிகள் போன்ற விலங்குகள் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. அதோடு பாங் நீர்த்தேக்கம் ஹிமாச்சலத்தின் முக்கிய மீன்பிடி பகுதியாகவும் விளங்கி வருகிறது.



Click it and Unblock the Notifications