உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கரை, ஒரு காலத்தில் அஜித் பிரதாப் சிங் என்ற அரசர், அரோர் அருகே ராம்பூர் எனும் நகரத்தை தலைமையாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில், கோட்டை ஒன்றை கட்டி அதற்கு பிரதாப்கர் என்று பெயரிட்டார். பின்னர் 1858-இல், பிரதாப்கர் நகரம் உருவாக்கப்பட்ட போது, இது பேலா பிரதாப்கர் என பெயரிடப்பட்டது. சாய் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் பேலா பவானி அம்மனை குறிக்கும் விதமாக பேலா பிரதாப்கர் என பெயர் வந்தது.
பிரதாப்கர் அருகே உள்ள சுற்றுலாத் தலங்கள்
இராமாயணம், மகாபாரதக் காலங்களோடு தொடர்பு கொண்ட வரலாற்று ஆவணங்களை கொண்ட நகரம் பிரதாப்கர். இவ்விடத்திற்கு இராமபெருமான் வந்து பேலா பவானி கோவிலில் வழிபட்டதாக கூறுவர்.
மேலும்,பயாஹரன் நாதர் அணை மகாபாரதக் குறிப்பில் இடம்பெற்றிருக்கிறது. பாண்டவர்களில் ஒருவரான பீமன், பாகாசுரனை வதம் செய்து, சிவலிங்கத்தை கோவிலில் நிறுவியதாக மகாபாரதம் கூறுகிறது.
பிரதாப்கர் நகரில் ஓடும் சாய் ஆறு, ஹிந்துக்களின் புனித ஆறாகும். இந்த ஆற்றில் புனித நீராட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஹிந்து யாத்ரிகர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாமல், பௌத்த சமயத்தவரை கவர்ந்திழுக்கும் வகையில் கோட் மடாலயம் இங்கு அமைந்திருக்கிறது.
பிரதாப்கரை அடைவது எப்படி?
விமானம், ரயில், மற்றும் சாலைகள் வழியாக பிரதாப்கரை எளிதில் அடைய முடியும்.
பிரதாப்கருக்கு செல்ல ஏற்ற காலம்
அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பிரதாப்கர் செல்ல ஏற்ற காலம். மற்ற காலங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், பிரதாப்கர் வரண்டு காணப்படும்.



Click it and Unblock the Notifications