குவெப்பம் நகரில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜோஸ் பௌலோ என்பவர் இரண்டே இரண்டு தூண்களை மட்டும் கொண்டு கட்டிடம் ஒன்றை எழுப்பினார். அதன் பின்னர், மறுவாழ்வு பெற விரும்பும் குற்றவாளிகள் இந்த தூண்களை கடந்து சென்று புது வாழ்வை தொடங்குமாறு பௌலோ அறிவித்தார். அந்த மேன்ஷன் பலேசியா டோ டியோ என்று அழைக்கப்படுகிறது. இது பற்பல முறை புதுப்பிக்கப்பட்டு இன்று மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
இந்த மேன்ஷன் இந்திய மற்றும் போர்த்துகீசிய கட்டிடக் கலைகளின் கலவையாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான வடிவமைப்பு இந்த மேன்ஷனுக்கு ஒருவித தனித்துவத்தை கொடுக்கிறது.
மேலும் உணவகம், நூலகம் மற்றும் வாயிலில் உள்ள ஹிந்து பாணி கத்தோலிக்க தேவாலயம் என்று அனைத்துமே சிறந்த முறையில் வகைப்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. எனவே ஒருவர் கோவான் உணவு வகைகளை சுவைத்துக் கொண்டு மதிய நேரத்தை இன்பமயமாக கழிக்க இந்த இடம் சிறந்த தேர்வாகும்.
பலேசியா டோ டியோ, மார்கோ நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு பனாஜி, வாஸ்கோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து கார்கள் அல்லது பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒருவர் சுலபமாக குவெப்பம் நகரை அடைந்து விடலாம்.