இராமேஸ்வரத்திலுள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மத முக்கியத்துவம் இரண்டையும் ஒருங்கே பெற்ற புனிதத்தலமாகும். இந்த இடத்தில் தான் இராவணனின் தம்பியும், இராவணனை கொன்ற பின்னர் இலங்கையின் மன்னனாகவும் இருந்த இருந்த விபீஷணருக்கு இராமர் ஆறுதல் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு சான்றாக இக்கோவில் சுவற்றிலிருக்கும் ஓவியத்தை சொல்லலாம்.
சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டம் வெளியிடப்பட்ட போது இந்த கோவிலிற்கு ஆபத்து வந்தது. ஆனால், திட்டங்களில் செய்யப்பட்ட மாறுதல்களால் பாரம்பரியம் மிக்க இக்கோவிலிற்கான ஆபத்து நீங்கியது.
சுற்றுலாவையே நம்பி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இந்த கோவில்தான் இன்றளவும் வாழ்வாதாரமாக உள்ளது.
கோதண்டராமர் கோவிலிற்கு ஆர்வமூட்டக்கூடிய வகையில் கல்கத்தாவுடன் நெருங்கிய தொடர்புள்ளது. 1976 மற்றும் 1978-ஆம் ஆண்டுகளில் வங்காளத்தை சேர்ந்த கொடையாளர் ராம்குமார் பங்குர் என்பவர் இந்த கோவிலிற்கான புணரமைப்பு பணிகளை செய்துள்ளார் என்பது கண்களால் கண்ட உண்மையாகும்.
இன்றைய நாட்களில், இராமேஸ்வரத்தில் உள்ள 31 கோவில்களை காக்கும் கோவிலாக இருக்கும் இராமநாதசுவாமி கோவில்தான் இந்த கோவிலையும் கவனித்து வருகிறது.



Click it and Unblock the Notifications