கங்கே அணைக்கு அடுத்ததாக இந்த இடம் நீர்வீழ்ச்சி மற்றும் சிற்பங்களுடன் கூடிய செயற்கை தோட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலைக்கும் நவீன கலைக்கும் இடையே சிறப்பாக விளங்குகிறது இவ்விடம். இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட நடைபாலம் ஒன்றும் இங்குள்ளது.
கற்சிலைகள் நிறைய எண்ணிக்கையில் உள்ள இந்த இடத்தில் அழகிய இயற்கை காட்சிகளும் சூழ்ந்துள்ளன. அல்பர்ட் எக்கா சவுக்கிற்கு அருகில் உள்ள ராக் கார்டன் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் சிறந்த தளமாக அறியப்படுகிறது.