ராணிக்கேத் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த கூண்ட் எனும் பிரசித்தமான சிறிய கிராமம் அமைந்திருக்கிறது. கோவிந்த வல்லப பந்த் எனும் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட தலைவர் பிறந்த ஊர் என்பதால் இது பிரபல்யமாக அறியப்படுகிறது. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத் ரத்னா விருது இவருக்கு 1957ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது.