ரத்னகிரி நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான கலைச்சின்னம் அரபிக்கடலை நோக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இது ரத்னகிரியில் மாண்டவி கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது.
பலவிதமான தூண் அமைப்பு மற்றும் சுவர் அமைப்புகளுடன் காட்சியளிக்கும் இந்த கலைச்சின்னம் பிரதிநிதி தோண்டு பாஸ்கர் எனும் சிற்பியால் ரத்னகிரிப்பகுதியின் கடற்கரையை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் பலவித சிற்பவடிப்புகள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அற்புத கலைச்சின்னத்துக்கருகில் நடக்கும்போது வீசும் கடல் காற்றும், சூழ்ந்திருக்கும் இயற்கை எழிலும், தூரத்தே தெரியும் கடலின் தொடுவானமும் உங்களை மயக்க வைக்கும் அம்சங்களாக உள்ளன.



Click it and Unblock the Notifications