தோட்ரா மற்றும் ரொஹ்ருவின் பிற கிராமங்கள் சற்று தொலைவிலேயே அமைந்திருந்தாலும் அவற்றை இணைக்க தனியான சாலைகள் கிடையாது. இந்த இடம் அங்கு முளைத்து வளரக்கூடிய காட்டு மலர்கள், மருத்துவகுணமிக்க தாவரங்கள், செடார், பிர்ச் மற்றும் அடர்த்தியான காடுகளில் கொத்து கொத்துகளாக காணப்படும் மலரையுடைய செடிகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
அழகிய நீர்வீழ்ச்சிகளும், பாய்ந்து செல்லும் நீரோடைகளும் இந்த இரு இடங்களின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளன. சாரங்சா சிகரத்தின் பின்னணியில், மரத்தால் உருவாக்கப்பட்ட கோவில்கள் மற்றும் மரத்தில் செய்யப்பட்டுள்ள கலைநயமிக்க வேலைப்பாடுகளை பார்க்கும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும், கலை ரசிகரும் இந்த இடத்தை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.
சாகச விரும்பிகள் லாரொட் வழியாக 45கிமீ தூரத்திலுள்ள திர்கி வரை மலையேற்றம் செய்யலாம். சுடாஷ், லரொட், சுன்ஹர் மற்றும் தான்வாரி ஆகிய இந்த பகுதியில் நன்னீர் மீன்பிடிப்பிற்காக புகழ் பெற்ற இடங்களாகும்.