தேசிய நெடுஞ்சாலை 95 –இல் அமைந்துள்ள மொரிந்தா அல்லது பகன்வாலா, ஒரு காலத்தில் ஆர்க்கிட் பூக்களால் நிறைந்து காணப்பட்டதால், இது ‘ஆர்க்கிட்களின் நகரம்’ என்றும் அறியப்படுகிறது.
இப்பூக்கள் பின்னர் குடியிருப்புகள் அமைப்பதற்காக அழிக்கப்பட்டு விட்டன. மொரிந்தாவின் நட்சத்திர ஈர்ப்பு, குருத்வாரா கோட்வாலி சாஹிப் ஆகும்.
இங்கு தான் குரு கோவிந்த் சிங் ஜியின் தாயார் – மாதா குஜ்ரி மற்றும் அவரது இரு மகன்களும் ஃபதேகாருக்கு அழைத்துச் செல்லப்படும் முன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பிரதான நெடுஞ்சாலைகளின் முக்கிய சந்திப்புப் புள்ளிகளில் அமைந்துள்ளது இந்த நகரம். ரூப்நகரிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள இந்த குருத்வாராவின் நிச்சலனமான சுற்றுப்புறத்தை பயணிகள் மிகவும் விரும்புவர்.



Click it and Unblock the Notifications