சம்பல்பூரில் இருந்து 24 கிமீ தொலைவில ஹடிபாரி உள்ளது. இந்த இடம் பத்ம ஸ்ரீ டாக்டர்.ஐசக் சான்ட்ராவால் உருவாக்கப்பட்ட தொழுநோய் இல்லத்திற்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். டாக்டர்.ஐசக் சான்ட்ரா மிகவும் புகழ் பெற்ற எளிமையான மனிதராவார்.
1892-ம் ஆண்டில் பிறந்த டாக்டர்.ஐசக் சான்ட்ரா சம்பல்பூர் நகரைச் சேர்ந்தவராவார். கிறிஸ்தவராக பிறந்த அவர் தன்னுடைய குடும்பத்தினரால் பாலங்கீரில் இருந்த மிஷனரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருடைய எண்ணங்கள் வேறு வழியில் சென்று கொண்டிருந்தன. கட்டாக்கில் டாக்டர் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய வாழ்நாளை தொழுநோயை அழிப்பதற்காக அர்ப்பணித்தார்.
அக்காலத்தில், தொழுநோயானது மக்களை வெகுதொலைவிற்கு துரத்தி சென்று கொல்லும் கொடிய நோயாக இருந்தது. இதன் காரணமாகவே, இவர் ஹடிபாரியில் தொழுநோய் இல்லத்தை அமைத்தார்.
இந்த கிராமம் அடர்த்தியான கானகங்களால் சூழப்பட்டிருக்கிறது. இன்றை காலங்களில், பசுமையான இயற்கை மற்றும் அமைதியன சூழலை கொண்ட கிராமமாக ஹடிபாரி உள்ளது.



Click it and Unblock the Notifications