1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் உஷாகோதி ஆகும். 300 ச.கிமீ பரப்பளவில் பாதுகாகப்புடன் இருக்கும் இந்த சரணாலயத்தில் மாறுபட்ட வகையிலான தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன.
டிபிகார் வனவிலங்கு சரணாலயம் போலவே, உஷாகோதி சரணாலயத்தில் இருந்தும் மகாநதிக்கு செல்ல முடிவதற்காக, ஹிராகுட் அணைக்கு நன்றி சொல்ல வேண்டும். சரணாலயத்திற்கு மேற்கில் இந்த அணை உள்ளது.
சந்தன மரம், வேம்பு, வேலமரம், சவுக்கு, சால் மற்றும் அர்ஜீன் ஆகிய இலையுதிர் கால மரங்கள் பலவும் உள்ள இடமாக இந்த சரணாலயம் உள்ளது. 35 யானைகள் மற்றும் 15 புலிகளை கொண்டிருக்கும் இந்த சரணாலயம் வேட்டையர்களிடமிருந்து நன்றாக பாதுகாக்கப்பட்டு வரும் இடமாகும்.
யானைகள ;மற்றும் புலிகள் மட்டுமல்லாமல், ஹார்போரிங் சிறுத்தைப்புலிகள், பைசன் மற்றும் சம்பார் மான்கள் ஆகியவையும் இந்த சரணாலயத்தில் உள்ளன. கையருகில் இருக்கும் தண்ணீர்; வசதியை வாழ்க்கையில் ஒருமுறையாவது படம் பிடிக்க வனவிலங்கு ஆர்வலர்கள் விரும்புவார்கள்.
இந்த சரணாலயத்தில் இரண்டு அறைகளுடன் இருக்கும் ஒரு குடிலில், இரவுகளிலும் தங்கி இருக்க விரும்பினால், சம்பல்பூர் வட்டார வனவிலங்கு அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.