இமாச்சல அரசு அருங்காட்சியகம் எனவும் வழங்கப்படும் இமாச்சல அரசு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஸ்காண்டல் பாயிண்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகம் 1974 ல் நிறுவப்பட்டது மேலும் பஹாரி குறுஞ்சித்திரங்கள், முகலாய, ராஜஸ்தானிய மற்றும் சமகால ஒவியங்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கலைநயம் மிக்க வெண்கல வேலைப்பாடுகள், புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட தபால் தலைகள், மானுடவியல்சார் பொருட்களை இங்கு காணலாம். சுற்றுலா பயணிகள் இங்கு குப்தா சிற்பங்களையும், மஸ்ரூர் கல் சிற்பங்களையும், குல்லுவின் முகமூடிகளையும் பார்க்க முடியும்.
இந்த நூலகம் பல வகையான வரலாற்றுப்புத்தகங்கள், கையெழுத்துப்பிரதிகளை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த அருங்காட்சியகம் செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை திறந்திருக்கும், திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மூடி இருக்கும்.
பார்வையிடும் நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.



Click it and Unblock the Notifications