சங்கட் மோச்சன் கோவிலானது கால்கா-சிம்லா நெடுஞ்சாலையில் கடல் மட்டத்திலிருந்து 1975 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபல வழிபாட்டுத்தலமாகும். அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக்கோவிலானது மனம் மயக்கும் இமாலய மலைத்தொடர்களையும், சிம்லா நகரத்தையும் காணும் வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
பாபா நீப் கரோரிஜி மகாராஜ் என்பவர் இங்கு விஜயம் செய்த போது இந்த இடத்தின் அமைதியில் மெய்மறந்து 1966 ல் இந்தக்கோவிலை நிறுவினார், பின்னர், நிர்வாகத்தினால் இந்தக்கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்தக்கோவிலில் பல்வேறு பிரகாரங்கள் பிரிக்கப்பட்டு, சிவன், ராமர் மற்றும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் கோவிலின் வடிவமைப்பு தென்னிந்திய கட்டிடக்கலை பாணியை வெளிப்படுத்துகிறது.
'லாங்கர்' என்றும் அழைக்கப்படும் கோவில் பிரசாதம், ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இக்கோவில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை ஏற்பாடு செய்வதற்கான வசதிகளை வழங்குகிறது.