வைஸ் ரீகல் லாட்ஜ் & தாவரவியல் பூங்கா முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. 1888 ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அழகிய அரசுப்பிரதிநிதி மாளிகையானது அப்ஸர்வெட்டரி ஹில்லில் அமைந்துள்ளது.
இந்த ஐரோப்பிய பாணி கட்டிடமானது பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகரமாக சிம்லா விளங்கிய போது ஜனாதிபதி வருகை புரியும் மாளிகையாக இருந்தது, எனவே இது 'குடியரசுத்தலைவர் மாளிகை' (Rashtrapati Niwas) என்று அழைக்கப்பட்டது. பேராசிரியர் S. ராதாகிருஷ்ணன் அவர்களின் பதவிக்காலத்தின் போது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டது.
நாட்டின் முன்னணி ஆராய்ச்சி அமைப்பான இந்திய உயர் கல்வி நிலையம் (Indian Institute of Advanced Study) 1964 ல் இங்கு ஸ்தாபிக்கப்பட்டது. இது ஒரு பசுமையான தோட்டங்கள் மற்றும் புல்வெளிகளால் சூழப்பட்ட ஆறு மாடி கட்டிடம் ஆகும்.
கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு கண்ணைக்கவரும் விதமாக அமைந்துள்ளது மேலும் மறுமலர்ச்சி கால கட்டிடக்கலையின் பாணியை பிரதிபலிக்கிறது.
இந்த நினைவுச்சின்னம் 1945 ல் நடைபெற்ற சிம்லா மாநாடு மற்றும் 1947 ல் நடைபெற்ற சிம்லா ஒப்பந்தம் போன்ற புகழ் பெற்ற வரலாற்று நிகழ்வுகளின் சாட்சியாக உள்ளது.



Click it and Unblock the Notifications