காஸ்பூர் காச்சரி அரசர்களின் இடைக்கால தலைநகராக இருந்தது. இங்கு இன்று அழிவின் விளிம்பில் உள்ள அரண்மனை இன்றும் காச்சரி அரசர்களின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அரண்மனையின் பழைய இடிபாடுகள், இந்த பகுதிகளில் அதிக செயல்பாடு இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.
காஸ்பூரில் உள்ள முக்கிய சுற்றுலா தளம் காச்சரி கோட்டை ஆகும். இது காச்சரி வம்ச அரசர்களின் இருப்பிடமாக இருந்தது. இங்கு உள்ள இந்த எளிய அரண்மனையை தவிர` சூர்யத்வர்' (சூரியன் நுழைவு வாயில்) மற்றும்` தேவாலயா' (கடவுளர்களின் வீடு) போன்ற இடங்களும் உள்ளது.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த பகுதியை ஆண்டு வந்த கோச் ராஜா, வாரிசு இல்லாமல் இறந்த பிறகு, இந்த பகுதி காஸ்பூர் டிமாச காச்சரி அரசர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.
காஸ்பூர் டிமாச காச்சரி அரசர்களின் ஆட்சியின் கீழ் வந்த பிறகு அவர்கள் காஸ்பூரை தலைநகராக அறிவித்தனர். அவர்களின் ஆட்சியின் கீழ் காஸ்பூரில் இந்த கோட்டை கட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் காஸ்பூரை டாக்சிகள் மூலம் எளிதில் அடையலாம்.



Click it and Unblock the Notifications