காசி விஸ்வநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை வாங்கி வந்து அந்த லிங்கத்தை சிவகாசியில் நிறுவினார்.
பின் 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிற்கால பாண்டிய மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயர்கர் போன்றோர் இதை ஒரு மிகப் பெரிய ஆலயமாகக் கட்டி அதற்கு காசி விஸ்வநாதர் ஆலயம் என்ற பெயரையும் சூட்டினர்.
அதற்குப் பின் இந்த ஆலயம் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. முதலில் அன்னையப்ப ஞானி என்பவர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்தார். பின் நாயக்கர்கள் இந்த ஆலயத்தைப் புதுப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து கிபி 1659ல் முத்து வீரப்ப நாயக்கர் என்பவர் இந்த ஆலயத்திற்கு ஒரு புதிய தேரை வழங்கினார். இந்த ஆலயத் திருவிழாவின் போது தேரில் சாமி வலம் வரும் நிகழ்வு மிக விமரிசையாக நடைபெறும்.



Click it and Unblock the Notifications