சிரவணபெலகொலாவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த அக்கனபசாதி கோயிலுக்கு விஜயம் செய்வது அவசியம். இந்த புனித யாத்ரீக ஸ்தலம் ஹொய்சள மன்னர் இரண்டாம் பல்லலா’வின் (பிராம்மண)அமைச்சரான சந்திரமௌலி என்பவரின் மனைவி அச்சியக்காவால்1121ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
வழவழப்பான சோப்புப்பாறை கற்களால் ஹொய்சள கட்டிடக்கலை சிற்பக்கலை பாணியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.இந்த அக்கனபசாதி கோயிலின் சிறப்பம்சம் இங்குள்ள 5 அடி உயர பர்ஷ்வநாதர் சிலையாகும்.
இது தவிர இந்த கோயிலில் கர்ப்பகிருஹம், சுகநாசி, கோபுரம் மற்றும் சபா மண்டபம் போன்ற அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த கோயிலில் யக்ஷ தரனேந்திரா, யக்ஷி பத்மாவதி போன்ற சிலைகளையும் காணலாம்.



Click it and Unblock the Notifications