ஸ்ரீரங்கப்பட்டணா செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த எழில் நிறைந்த சிற்றுலா ஸ்தலம் பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு இடமாகும். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கப்பகுதி நீருக்கருகில் உட்கார்ந்து அமைதியாக ரசிக்க விரும்பும் உள்ளங்களுக்கு மிகப்பொருத்தமான இடமாகும்.
இந்த ஸ்தலத்தை ரசிப்பதற்கு பொருத்தமான காலம் குளிர்காலமாகும். அச்சமயம் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன் பயணிகள் குளிக்கவும் கரையோரம் பொழுது போக்கவும் ஏற்ற சூழலையும் கொண்டுள்ளது. இது பெரிய நீர்வீழ்ச்சியாக இல்லாவிட்டாலும் 15 கி.மீ தூரத்திலுள்ள மைசூரிலிருந்து பயணிகள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.
இது மட்டுமின்றி சினிமா இயக்குநர்களுக்கு மிகப்பிடித்த இடமாகவும் (படப்பிடிப்பிற்கு பொருத்தமான இடமாக) பால்முரி நீர்விழ்ச்சி பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications