ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அமைந்திருக்கும் அக்கமாதேவி குகைகள், ஸ்ரீசைலம் நகரத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து இருந்து வருவதாக நம்பப்படுகிறது.
12-ஆம் நூற்றாண்டு கர்நாடக தத்துவ ஞானியான அக்கமாதேவி இந்த கோகியின் அடி ஆழத்தில் உள்ள சிவலிங்கத்தை நோக்கி கடுந்தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த குகைகள் அவருடைய பெயரிலேயே அக்கமாதேவி குகைகள் என்று அழைக்கப்படுகிறது.
அக்கமாதேவி குகைகள் கிருஷ்ணா நதிக்கு எதிர் நீச்சாக அதற்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த குகைகள் அனைத்தும் இயற்கையாக உருவாகியவைகள் ஆகும். அதிலும் குறிப்பாக பிராதான குகையில் உள்ள இயற்கையாக உருவான பாறை வளைவு புவியியல் அற்புதமாக கருதப்படுகிறது.
இந்த வளைவு 200x 16x 4 அளவுகளில் அமைந்திருப்பதோடு, எந்த வகையான ஆதரவும் இல்லாமல் உறுதியாக நிற்பது மற்றொரு அதிசயம். எனவே சுற்றுலாப் பயணிகள் குகைகளுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதை மறந்துவிட்டு இந்த வளைவின் அழகிலேயே மூக்கித் திளைப்பது இயல்பே.
அக்கமாதேவி குகைகளில் காணப்படும் பாறைகள் அனைத்தும் பூமி தோன்றிய நாள் முதலாக இருப்பதாக நம்பப்படுவதால் வரலாற்று ஆர்வலர்களும், பயணிகளும் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
ஆதலால் 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த குகையை நீங்கள் ஸ்ரீசைலம் நகருக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.