மராட்டிய மாமன்னர் சிவாஜி மஹாராஜாவின் பெயரை தாங்கியிருக்கும் சிவாஜி ஸ்புர்த்தி கேந்திரா, ஸ்ரீசைலம் நகரத்தின் விளையாட்டு மையமாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தை அடைய நீங்கள் 30 படிக்கட்டுகளை ஏறிக் கடந்தாக வேண்டும்.
அப்படி படிக்கட்டுகளை கடந்த பின்பு அற்புதமாக வடிமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு மைய கட்டிடத்தின் எழிலும், அங்கு சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல வடிக்கப்பட்டிருக்கும் சிவாஜி மஹாராஜாவின் சிலையின் கம்பீரமும் பயணிகளை வியப்பில் ஆழ்த்தக் கூடியவை.
சிவாஜி ஸ்புர்த்தி கேந்திராவின் படிக்கட்டுகள் கைப்பிடி கம்பிகளை கொண்டிருப்பது பாதுகாப்பு ஏற்பாடாக மட்டுமில்லாமல் கீழேயுள்ள பள்ளத்தாக்கின் அழகை பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் பரிபூரணமாகவும் ரசித்துப் பார்க்க ஏதுவாக உள்ளது. அதோடு மையத்திலிருந்து அருகிலுள்ள ஸ்ரீசைலம் அணையையும் பயணிகள் தடையேதுமில்லாமல் கண்டு ரசிக்கலாம்.
சிவாஜி ஸ்புர்த்தி கேந்திரா விளையாட்டில் சாதிக்க விரும்பும் குழைந்தைகளுக்காக துவங்கப்பட்டுள்ளது. இங்கு கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், பாட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஏரளமான குழந்தைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். முக்கியமாக இந்த விளையாட்டு மையத்திலிருந்து எண்ணற்ற குழந்தைகள் சீமாந்திரா மாநிலத்தின் சார்பாக தேசிய அளவிலான விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளனர்.