மன்னார்குடியிலுள்ள இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், “தஷிண துவாரகா” என்று பக்தர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலில், கிருஷ்ணபகவான், “இராஜகோபாலஸ்வாமி” என்ற திருப்பெயரில் வழிபடப்படுகிறார்.
கோயில் வளாகம், சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது.
இக்கோயில் குலோத்துங்கச் சோழரின் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.
இக்கோயில் குளம், சுமார் 1158 அடி நீளம் மற்றும் 837 அடி அகலம் கொண்டு, “ஹர்தித்ரனதி”” என்ற் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது. இக்கோயில் குளம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில் குளங்களுள் ஒன்றாகும்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள், அதாவது தமிழ் மாதமான பங்குனி, இங்கு செல்வதற்கு ஏற்ற காலமாகும். பங்குனி மாதத்தில், இக்கோயிலில், சுமார் 16 நாட்களுக்கு “பங்குனித் திருவிழா”” கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications