பனி மாதா தேவாலயம் 'பெஸிலிக்கா ஆப் லேடி ஆப் ஸ்னோ' என்று அறியப்படுகிறது. இந்த இடம் 1542 இல் தூய பிரான்சிஸ் வருகை மூலம் புனிதம் பெற்றது என்று கூறப்படுகிறது.
பின்னர் 1711ம் ஆண்டு போர்த்துகீசியர் மூலம் இதன் குன்றின் மீது ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இது 1713 இல் திறக்கப்பட்டது. இந்த தேவாலயமானது மேரி மாதாவிற்கு அர்ப்பணித்து கட்டப்பட்டது.
1555 ல் "சாண்டலினா" என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி கொண்டுவரப்பட்ட மாதாவின் சிலை இந்த தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது. 1982ம் ஆண்டு இந்த சிற்றாலயமானது தேவாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆகஸ்டு மாத்ம் 5 ம் தேதி கொண்டாடப்படும் ஆண்டு திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் ஆண்டு தோறும் அலை மோதுகிறது.



Click it and Unblock the Notifications