தாரா நகரி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம் இந்த நாகர்ஃபோர்ட் ஆகும். கார்த்திகை பௌர்ணமித்திருநாளில் இங்கு நடைபெறும் ஒரு திருவிழாச்சந்தைக்காக இது பிரசித்தி பெற்றுள்ளது.
இங்கு ஒரு தீர்த்தக்குளம் மற்றும் பல புராதனமான கோயில்கள் உள்ளன. கௌதம் மந்திர், மாதா மந்திர், ஷ்யாம் மந்திர், சர்புஜா மந்திர் மற்றும் பஞ்ச்குயன் பாலஜி மந்திர் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.