Search
  • Follow NativePlanet
Share
» »சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பஞ்ச லோக சிலைகள்!

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பஞ்ச லோக சிலைகள்!

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோயிலில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பஞ்சலோக சிலைகள் மற்றும் செப்புத் தகடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இந்த சின்னங்கள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது, பஞ்சலோக சிலைகள், பீடங்கள், சைவ துறவிகளின் பாடல்கள் அடங்கிய 462 செப்புத் தகடுகள் மற்றும் பல்வேறு கோயில் வழிபாட்டு பொருட்கள் ஆகியவை கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய தொல்லியல் ஆய்வாளர்கள் சென்னையிலிருந்து சீர்காழி விரைந்துள்ளனர்!

தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷம்

1,000 ஆண்டு பழமையான ஸ்ரீ சட்டைநாதர் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் உள்ள ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்றழைக்கப்படும் ஸ்ரீ சட்டைநாதர் கோயில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர் உற்சவர் கோயிலாகும். திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரியார், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவி ராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் உள்ளிட்ட பல மகான்கள் இத்தலத்து இறைவனைப் போற்றியுள்ளனர்.

தேவாரப் பாடல்களில் போற்றப்படும் சிவாலயங்களில் ஒன்று

துறவி திருஞான சம்பந்தர், கோயிலின் தொட்டியின் படியில் குழந்தையாக அழுது கொண்டிருந்தபோது, அன்னை பார்வதி அவருக்கு தங்கப் பாத்திரத்தில் பால் ஊட்டிய பிறகு தனது முதல் பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது. அந்த அற்புதம் நடந்த திருத்தலம் இதுதானாம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலம் தேவாரப் பாடல்களில் போற்றப்படும் 14வது சிவாலயம் இதுவாகும். இத்தலத்தின் சிறப்புக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

sirkazhisattainathartemple

32 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருக்கும் கும்பாபிஷேகம்

சீர்காழியில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோவில், தர்மபுரம் ஆதீனம் மடத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. சமீபத்தில், மே 24ல் கும்பாபிஷேகம் நடத்த, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் மேற்கு கோபுரம் அருகே யாகசாலை பூஜைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தொழிலாளர்கள் அகழ்வாராய்ச்சியைப் பயன்படுத்தி குழி தோண்டியபோது, சில மீட்டர் ஆழத்தில் பல பொக்கிஷங்கள் கிடைத்தன.

sirkazhisattainathartemple

தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்

கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் 22 பஞ்சலோக சிலைகள், சிலைகள் வைக்கப் பயன்படுத்தப்பட்ட 55 பீடங்கள், சைவ துறவிகளின் பாடல்கள் அடங்கிய 462 செப்புத் தகடுகள் மற்றும் மற்றும் கோயிலில் பூஜைகளில் பயன்படுத்தப்படும் பழைய கலைப்பொருட்கள், விளக்குகள் மற்றும் கலசங்கள் ஆகியவை தோண்டியெடுக்கப்பட்ட மற்ற பொருட்களில் அடங்கும்.

sirkazhisattainathartemple

சீர்காழிக்கு விரைந்த தொல்லியல் ஆய்வாளர்கள் குழு

சென்னையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் குழுவினர் கோயில் வளாகத்தில் உள்ள தோண்டப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஐகான்களின் தோற்றம் மற்றும் காலம் ஆகியவை பரிசோதனைக்குப் பின்னரே கண்டறியப்படும் என்று அதிகாரி மேலும் கூறினார். கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள், அதிகாரப்பூர்வமாக, அரசின் சொத்துகள். தொல்பொருள் ஆலோசகர்கள் தொல்பொருள்களை ஆய்வு செய்து, அவற்றில் பொறிக்கப்பட்ட பாடல்கள் உள்ளிட்ட தகவல்களைப் பிரித்தெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

462 செப்புத் தகடுகளில் சங்கத் தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகள், அதன் தோற்றம் குறித்த தகவல்களைப் பெற ஆய்வு செய்யப்படும் என்று மேலும் தெரிய வந்துள்ளது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+