வரலாற்று இடங்கள், கடற்கரைகள், ஆலயங்கள், வனவிலங்குகள், அதீத பாரம்பரியமென காணப்படும் இவ்விடம், இந்தியாவிலேயே அழகிய மேற்கு மாநிலத்தை கொண்டு விளங்க, அது குஜராத் எனவும் நமக்கு தெரியவருகிறது. இவ்விடமானது இந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் நினைவுகளை தாங்கிக்கொண்டு விளங்குகிறது. அதீத கலாச்சாரத்தை கொண்டு குஜராத் மிகப்பெருமளவில் காணப்பட, நவராத்திரி போன்ற விழாவின் போது இதன் சிறப்பை நம்மால் காணவும் முடியக்கூடும்.
தனித்துவமிக்க நாட்டுப்புற நடனமான தாண்டியா ராஸ், தனித்துவமிக்க உணவு வகைகள், அதீத பாரம்பரியத்தையும் கொண்டிருக்கும் குஜராத், விடுமுறைக்கு ஏற்ற இடமாக கண்டிப்பாக அமையக்கூடும். மாநிலத்தின் கட்டிடக்கலை அற்புதமானது என குஜராத்திற்கு வரும் நாம் செய்ய வேண்டிய விசயங்கள் பல இங்கே காணப்படுகிறது.
கிர் தேசிய பூங்காவின் வனவிலங்கு வாழ்க்கை பற்றிய ஒரு ஆராய்ச்சி:
ஆசிய சிங்கங்கள் காணப்படும் ஒரே இடமாக குஜராத்தின் கிர் தேசிய பூங்கா காணப்படுகிறது. அழிந்துக்கொண்டு வரும் இனமாக சிங்கங்கள் இங்கே காணப்பட, வருடந்தோரும் கிர்ரில் மக்கள் தொகையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த தேசிய பூங்காவானது அதீத வேறுபட்ட பல்லுயிர் பிரிவை கொண்டிருக்க, இது விலங்குகளுக்கான இடமாகவும் அமைகிறது.
இங்கே நாம் வரும் சவாரி மூலம் இன்னும் பல விலங்குகளையும் இங்கே காண, அவை கோடிட்ட ஹைனேஸ், இந்திய சிறுத்தைப்புலிகள், கலைமான்கள், சிவந்த மங்கீஸ் என பெயர் சொல்லும் பலவும் இங்கே காணப்படுகிறது.
PC: Jason Wharam
அஹமதாபாத் நோக்கிய நடைப்பயணம்:
சமீபத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இந்த நகரத்தை முடிவு செய்ய, முக்கியத்துவம் வாய்ந்த நகரமான அஹமதாபாத், கதை சொல்கிறது நம் காதுகளில். அஹமதாபாத் தெருக்களில் நாம் நடக்க, நாட்டுப்புற தன்மைக்கொண்ட, உலகிலேயே பழமைவாய்ந்த அழகுடன் காணப்படும் இவ்விடம், அருகாமையில் சிறு கட்டிடங்களை கொண்டு மிளிர, பாரம்பரிய தளம் என பலவும் இங்கே காணப்படுகிறது.
அஹமதாபாத் சுற்றுலாவாக ஒழுக்கமான பாரம்பரிய வழிக்காட்டுதலின் பின்னணியில் நாம் நடக்க, நாமும் நகரம் வழியாக செல்ல, ஒலி மூலமான வழிக்காட்டுதலும் நமக்கு கிடைத்திடுகிறது.
PC: ddasedEn
டியூவின் கடற்கரையில் ஒரு தாவல் பயணம்:
போர்த்துக்கீசியர்களின் பாரம்பரியமாக காணப்படும் இப்பகுதி கடந்த காலத்தில் அவர்களால் ஆட்சி செய்ததாக சொல்லப்படுகிறது. கடற்கரையில் தாவும் நாம், அமைதியான டியூ கடற்கரையை அடைய, கொக்லா கடற்கரை, நாகவோ கடற்கரை, கொப்திமாத கடற்கரை என பலவும் காணப்படுகிறது.
நைய்தா குகையை நாம் ஆராய அல்லது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டியூ கோட்டையை நாம் காண, போர்த்துகீசியர்களின் ஆக்கப்பூர்வமான கட்டிடக்கலையானது நம்மை வெகுவாக கவர்கிறது.
PC: India Untravelled
சபர்மதி ஆசிரமத்தின் வரலாற்று வெளிப்பாடு:
இங்கிருந்து தொடங்கப்படும் புகழ்மிக்க தண்டி யாத்திரை மகாத்மா காந்தியினால் அரங்கேற, தேசிய நினைவு சின்னமான சபர்மதி ஆசிரமம், மிகவும் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பாக அமைகிறது. இந்த ஆசிரமத்தில் அருங்காட்சியகம் காணப்பட, அமைப்புகளும், பொருட்காட்சியுமென, காப்பகங்கள் என மகாத்மா காந்திக்கான நினைவு சின்னங்களும் காணப்படுகிறது.
நீங்கள் 90 நிமிட வழிக்காட்டுதலின்படி நடந்து செல்ல, ஆசிரமத்தின் வழியாகவும் என மகான் நிவாஷ், உபாசனா மந்தீர் என பல இடங்களையும் காண முடிகிறது.
PC: Hardik jadeja
லக்ஷ்மி விலாஷ் அரண்மனையை நாம் காணலாம்:
ஆடம்பரமான அரண்மனையை கொண்டிருக்கும் அரச குடும்பத்து வழக்கத்தை ஏமாற்ற காணப்படுகிறது வதோதராவின் லக்ஷ்மி விலாஷ் அரண்மனை. இந்த நெகிழவைக்கும் அரண்மனையானது விலைமதிப்பில்லா அமைப்பை கொண்டிருக்க, 4 மடங்கு அளவில் பெரிதான புகழ்வாய்ந்த பக்கிங்காம் அரண்மனையாகவும் காணப்படுகிறது. இந்தோ - சர்கானிக் கட்டிடக்கலை பாணியில் இது கட்டப்பட்டிருக்க, 1890ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மூன்றாம் மஹாராஜ சயாஜிராவோ கயேக்வடினால் இது கட்டப்பட்டும் இருக்கிறது.
இந்த அரண்மனையின் ஒரு அங்கமானது சுற்றுலா ஆர்வலர்களை ஈர்த்திட, இங்கே மகாராஜ பத்தேஹ் சிங்க் அருங்காட்சியகமும் காணப்படுகிறது. அற்புதமான சிற்பங்களை கொண்டிருக்க, பளிங்கு கற்கள், வெண்கலம் என பலவற்றாலும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
PC: Hardik jadeja
சாம்பனரின் அற்புதமான கட்டிடக்கலையை நாம் காணலாம்:
சாம்பனரில் காணப்படும் சாம்பனர் - பாவகத் தொல்பொருள்துறை பூங்கா, 3280 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த நகரமானது மஹ்முத் பெகாதா அரசனால் கட்டப்பட்டிருக்க, மாபெரும் மசூதிகளும், ஆலயங்களும், கோட்டைகளும், இராணி கோட்டைகளுமென இந்த பகுதியில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
இங்கே காணப்படும் அழகிய அமைப்புகளுள் நாகினா மஸ்ஜித், கேவடா மஸ்ஜித், கலிகா மாட்டா ஆலயம், சுருளை வடிவ படிக்கிணறு என பெயர் சொல்லும் பலவும் காணப்படுகிறது.
PC: Birsa Murmu
தலை சிறந்த ரான் ஆஃ கட்சிக்கு ஒரு அழகிய பயணம்:
ரான் ஆஃ கட்சை நாம் பார்த்திடாமல் குஜராத்தின் நம் பயணமானது ஒரு போதும் முழுமையடையாமல் போக, உலகிலேயே மிகப்பெரிய உப்பு பாலைவனம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடமானது மாபெரும் இடைவெளியுடன் காணப்பட, பால் நிறம் கொண்டு வென்மையுடன் பரந்து 7,505 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் காணப்படுகிறது.
ரான் உட்சவத்தின் போது இந்த கட்ச் பகுதியினை நாம் பார்க்க ஏதுவாக அமைய, இவ்விழாவானது வருடந்தோரும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமையானது இந்த மாநிலத்தில் ஓங்க மூர்க்கத்தனமான விழாவாகவும் இவ்விழாவானது அமையக்கூடும்.
PC: Rahul Zota