Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்!!

இந்தியாவில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்!!

இந்தியாவில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்!!

By Bala Karthik

பல அழகிய வரலாற்று தளங்கள் கொண்ட நாடு தான் நம் நாடு. இந்த வரலாற்று தளங்களை நாம் காண, காணப்படும் முக்கிய காரணங்களுள் ஒன்றாக வரலாற்றை தவிர்த்து இயற்கை அழகும் அமைய, இதனால் சுற்றுலா பயணிகளுக்கான புகழ்பெற்ற இடமாக இது அமைகிறது. நம் நாட்டின் அனைத்து வரலாற்று இடங்களும் தனக்கான தனித்துவமிக்க கதைகளை தாங்கிக்கொண்டு விளங்க, அவற்றுள் பலவும் இங்கே நாம் வருவதன் மூலம் உண்மை என நம் மனதிற்கு புரியவைப்பதோடு, வாழ்க்கையை மாற்ற கூடியதாகவும் அமைகிறது.

வரலாற்று இடங்கள் மற்றும் அழகிய நினைவு சின்னங்கள் நம் நாடு முழுவதும் எவ்வித பற்றாக்குறையுமின்றி பரந்து விரிந்து காணப்பட, அவை எவ்வித பயண ஆர்வலர்களுக்கும் மனதில் இன்பத்தை விதைத்திடுகிறது. நினைவு சின்னங்களான தாஜ் மஹால், குதுப் மினார், ராஜஸ்தான் கோட்டை என அதோடு இணைந்து பொற்கோவில் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ள, எண்ணற்ற பல இடங்கள் குறைவான தகவலை தாங்கிய வண்ணமும் இருக்கிறது. அப்பேற்ப்பட்ட குறைவாக பார்க்கப்படும் இலக்குகள் ஒவ்வொரு கோணத்திலும், உங்களை ஈர்த்திடவும் செய்கிறது.

 டலட்டல் கார்:

டலட்டல் கார்:

சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் எஞ்சியவைகளுள் ஒன்றாக இது இருக்க, தாய் அஹோம் கட்டிடக்கலையையும் கொண்டு பதினேழாம் நூற்றாண்டின் ஸ்வர்கதியோ ருத்ர சிங்கா என்பவரால் கட்டப்பட்டது தான் இந்த டலட்டல் கார் எனப்பட, இவர் தான் மிகவும் சக்திவாய்ந்த அஹோம் அரசராக ஆட்சி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஹாத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் ராங்க்பூர் எனப்பட; இந்த அமைப்பானது முதலில் இராணுவ அடித்தளத்திற்காக கட்டப்பட்டதால் அஹோம் அரசாட்சியின் ஆதாரமாக உயர்ந்து காணப்படுகிறது.

PC: Manojsahuctp

ஓசியன்:

ஓசியன்:

பல ஆலயங்களையும், கோட்டைகளையும் மற்றும் அரண்மனையையும் ராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டிருக்க, ராஜஸ்தானின் வரலாற்று பிரியர்களுக்கான இடமாக காணப்படுகிறது. இருப்பினும், ஓசியனுக்கு மாறாக, பாலைவனமாக அல்லாமல் சோலைவனமாக நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இந்த சிறு கிராமமானது தார் பாலைவனத்தை சுற்றி கட்டப்பட்டிருக்க, கம்பீரமாக மணல் குன்றாக, ஜோத்பூரின் நினைவு சின்னமாக விளங்கும் இவ்விடத்தை தவிர்க்காமல் நாம் காண வேண்டியது அவசியமாகிறது.

இந்த குக்கிராமமானது ஒன்றல்லாமல் இரு ஆலயங்களுக்கு வீடாக விளங்க, ஆனால் 16 அழகிய புத்த வடிவமைப்பையும், ஜெய்ன் ஆலயத்தையும் கொண்டிருக்க 8 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இது கட்டப்பட்டதெனவும் தெரியவருகிறது.

இதனை கடந்து, மிகவும் புகழ்மிக்க ஒன்றாக சாச்சியா மாத்தா ஆலயம், சூரிய ஆலயம் மற்றும் மஹாவீரா ஜெய்ன் ஆலயம் காணப்பட, இவை அலங்கரிக்கப்பட்ட தூண்களுடன், சிற்பம் நிறைந்த சுவற்றையும் கொண்டிருக்க, அது கஜுராஹோவை ஒத்த அழகுடனும் காணப்படுகிறது.

PC: Schwiki

ஷேத்தி ஹல்லி தேவாலயம்:

ஷேத்தி ஹல்லி தேவாலயம்:

அதீத வரலாற்று மற்றும் வரலாற்று இடங்களை கொண்டிருக்கும் மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது. அரண்மனைகள் மற்றும் ஆலயங்கள் மத்தியில் 200 வருட பழமையான கோதிக் அமைப்பானது காணப்பட, ஹேமாவதி நதிக்கரையில் இது காணப்பட, இவ்விடமானது மெதுவாக சுற்றுலா ஆர்வலர்களை ஈர்க்க தொடங்க, ஆர்வமிக்க பயண ஆர்வலர்களை ஆனந்தத்திலும் இவ்விடம் தள்ளுகிறது.

இங்கே நதியில் மூழ்கி காணப்படும் அணையானது பருவ மழைக்காலத்தில் தான் ஒரு நினைவு சின்னமென நினைவுப்படுத்த ஆசைக்கொள்ள, தேவாலயமும் கோடைக்காலத்தில் நீரானது பின் வாங்கும்போது காட்சியளித்து கண்களுக்கு விருந்து படைத்திடுகிறது.

1800 ஆம் ஆண்டுக்கு பின் மதபிரசாரகர்களால் கட்டமைக்கப்பட்ட இவ்விடம், தாக்கத்தை ஏற்படுத்தும் இடமென்பதால் நம் மனதானது கண்டிப்பாக காண ஆசைப்படக்கூடும். இந்த அமைப்பை நீரானது விழுங்க, சேதமடைந்து காட்சியளிக்கும் இந்த நினைவு சின்னம், ஒரு சிலவற்றை இழந்தும் காணப்பட; ஆகையால், இங்கே நாம் விரைவில் பயணிப்பது நல்லதாகும்.

PC: Bikashrd

செல்லுலார் சிறை:

செல்லுலார் சிறை:

1857 மற்றும் 1943க்கு இடைப்பட்ட காலத்தில், எண்ணற்ற அரசியல் கைதிகளையும், இந்திய சுதந்திர போராட்ட புரட்சியாளர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக நம் மனதில் நினைவுப்படுத்த, போர்ட் ப்ளைரின் செல்லுலார் சிறையின் தனித்த சிறைகளுக்கு புகலிடமாக இது காணப்படுகிறது.

இதனை ‘களப்பணி' எனவும் அழைக்க, இந்த அமைப்பானதை சுதந்திரத்திற்கு பிறகு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுவிட, இந்திய காலனித்துவ கடந்த காலத்தின் நினைவிடமாக இது விளங்குகிறது. ஓர் அழகிய ஒளியும், ஒலியுமென கைதிகளின் த்ரில்லான வாழ்க்கை அனுபவத்தை இங்கே வருபவர்களுக்கு உரைத்திட, சிறைவாசம் கொண்டவர்களின் வாழ்வானது நம் மனதை நெகிழவைத்திடுகிறது.

PC: Aliven Sarkar

விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம்:

விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம்:

இவ்விடம் பற்றிய எந்த வித விழிப்புணர்வற்று பலரும் இங்கே வந்து செல்ல, கடந்த கால பல அற்புதமான கல்வி மையத்தை இவ்விடம் கொண்டிருக்க, இந்தியாவில் காணப்படும் மையங்களுள் இதுவும் ஒன்றாக அமைய, பாகல்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த பல்கலைக்கழகம் காணப்படுகிறது.

மிகப்பெரிய புத்த போதனை மையங்களுள் ஒன்றாக இந்த பல்கலைக்கழகம் விளங்க, பரந்து விரிந்த நிலப்பரப்பில் காணப்படுகிறது. இவ்விடமானது 52 அறைகளை தாழ்வாரத்தின் இருப்பக்கங்களிலும் கொண்டு பரந்து விரிந்து காணப்பட, மாபெரும் ஸ்தூபாவை மையத்தில் கொண்டிருக்கிறது. விலைமதிப்பற்ற நூலகமானது இந்த தளத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட, அவை மேலும் இந்தியாவின் அதீத அகன்று விரிந்த வரலாற்றை தெரிந்துக்கொள்ள உதவுகிறது.

PC: Reeturanjan

அமர்கண்டாக்:

அமர்கண்டாக்:

காட்டின் மத்தியில் உயர்ந்து காணப்படும் இவ்விடம், விந்தியா மற்றும் சத்புரா தொடர்ச்சிகள் சங்கமிக்கும் இடத்தின் அருகாமையில் அமைந்திருக்க, இந்த ஆலயமானது பல்வேறு விதமான வடிவ கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க, 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது எனவும் தெரியவருகிறது.

இதனை தவிர்த்து, இந்த புவியியல் அமைப்பானது புதிரான அழகு முதல் கனவு ஆலயங்கள் மற்றும் சிற்பங்கள் வரை கொண்டிருக்க, அவற்றுள் ஸ்ரீ யந்திரா மஹா மேரு ஆலயமும் அடங்க, இதன் காட்சியானது நான்கு முகம் கொண்டு, திரிப்புர சுந்தரி தேவியையும் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

PC: R Singh

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+