Search
  • Follow NativePlanet
Share
» »வேலூர் மாவட்டத்தில் நீங்கள் கண்டு களிக்க வேண்டிய அழகிய சுற்றுலாத் தலங்கள் இதோ!

வேலூர் மாவட்டத்தில் நீங்கள் கண்டு களிக்க வேண்டிய அழகிய சுற்றுலாத் தலங்கள் இதோ!

பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர சாம்ராஜ்யம், கர்நாடகப் பேரரசு மற்றும் ஆங்கிலேயர்கள் ஆண்ட, கடந்தகால வளமான வரலாற்றை வழங்கும் வேலூர் பல அழகிய, வரலாற்று மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள அற்புதமான வேலூர் கோட்டையின் காரணமாக 'கோட்டை நகரம்' என்று செல்லமாக அழைக்கப்பட்டாலும், வேலூரில் சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன!

vellorefort

வேலூர் கோட்டை

15 ஆம் நூற்றாண்டில் சன்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்மா ரெட்டி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் இராணுவ கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்றான இந்த கோட்டை இந்தியாவின் தனித்துவமான கோட்டைகளில் ஒன்றாகும். இது 220மீ உயரத்தில் 500 மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள இதன் நுழைவாயிலில் ஒரு பெரிய அகழி உள்ளது, அங்கு முன்பு 10,000 முதலைகள் நீந்தின என்று வரலாறு கூறுகிறது.

ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் கோட்டை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் ஒரு அசாதாரண திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிக்கலான கல் தூண்களின் வேலைப்பாடும், கோயிலின் கூரையின் வேலைப்பாடும் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்.

vainubappuobservatory

வைனு பாப்பு அப்சர்வேட்டரி

வேலூரில் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் வைனு பாப்பு வான்காணகம். வானவியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படும் எவரும் கட்டாயம் இந்த இடத்திற்கு வருகை தர வேண்டும். 100 ஏக்கர் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஆய்வகத்தில் 93 அங்குல தொலைநோக்கி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கியையும் கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு, இந்த ஆய்வகம் ஒரு சிறந்த இடமாகும்.

ஸ்ரீபுரம் பொற்கோயில்

திருமலைக்கொடியில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் பார்ப்பதற்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். தங்க கோவில் ஆன்மீக பூங்கா அல்லது 'ஆன்மீக சோலை'க்குள் அமர்ந்திருக்கிறது. 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் பார்வையாளர்களை அதன் அழகால் கட்டிப் போடுகிறது.

periyarpark

பெரியார் பூங்கா

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரியார் பூங்கா உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அடிக்கடி பார்வையிடும் இடமாகும். இந்த இடம் முழுவதும் அதன் துடிப்பான பச்சை மேட்டிங் மற்றும் இங்குள்ள பல்வேறு வகையான பறவைகளுக்கு மிகவும் பிரபலமானது. பூங்காவில் பறவைகளுக்கென முற்றிலும் தனிப் பிரிவு உள்ளது.

ஏலகிரி

30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி, கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில், ஏலகிரி தனது சுற்றுலாப் பயணிகளுக்கு ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, அழகான பழத்தோட்டங்கள் மற்றும் ரோஜா தோட்டம் போன்ற சில அழகான இடங்களை வழங்குகிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமான ஏலகிரி, சுற்றுலாப் பாதையில் இருந்து முற்றிலும் விலகி, அருகிலுள்ள மற்ற பிரபலமான மலைவாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அமைதியாக நம்மை வரவேற்கிறது.

palamathihills1

பலமாதி மலைகள்

ஓட்டேரி ஏரி மற்றும் பாலமதி ரிசர்வ் வனப்பகுதியை உள்ளடக்கிய பாலமதி மலைகள், மாசு மற்றும் முக்கிய நகரப் பகுதியின் சலசலப்பு ஆகியவற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டங்களில் இனிமையான வானிலையுடன் கூடிய அனுபவத்திற்காக பாலமதி மலைகளுக்குச் செல்ல சிறந்த நேரமாகும்.

அமிரிதி வனவிலங்கியல் பூங்கா

வேலூர் அமிர்தி விலங்கியல் பூங்கா 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வேலூரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்துள்ளதால், முள்ளம்பன்றி, சிவப்பு தலை கிளிகள், மலைப்பாம்புகள், காதல் பறவைகள், முயல்கள் போன்ற இனங்களை ஒருவர் காணலாம். இந்த பூங்கா நகரத்திலிருந்து அரை மணி நேர பயணத்தில் அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் ஒரு நாள் சுற்றுலாவுக்காக குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குழு இங்கு வருகை தருகிறது

ஆற்காடு

வேலூரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். பாலாற்றால் சூழப்பட்ட இந்த நகரம் ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சென்னை மற்றும் பெங்களூர் அல்லது சென்னை மற்றும் சென்னைக்கு இடையே உள்ள பண்டைய வர்த்தக பாதையாக அறியப்படுகிறது. முன்னதாக திருவழுந்தூர் என்று அழைக்கப்பட்ட ஆற்காடு, கர்நாடக நவாபின் தலைமையகமாகவும், சோழர்கள், மராட்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் மற்றும் பிஜபூர் சுல்தான்களால் ஆளப்பட்டது.

archeologicalsurveyofindiamuseum

இந்திய தொல்லியல் துறை அருங்காட்சியகம்

இந்திய தொல்லியல் துறை அருங்காட்சியகம் வேலூர் கோட்டைக்கு அருகில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 1000 ஆண்டுகள் பழமையான பல்வேறு வகையான பழங்கால கற்கள், சிலைகள், கல் சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி நமக்கு விளக்கும் கண்காட்சிகள் உள்ளன. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில சிற்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் சுற்றி உலாவவும், பணக்கார வரலாற்றை அனுபவிக்கவும் குறைந்த பட்சம் 2 மணிநேரம் ஆகுமாம்.

More News

Read more about: vellore travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+