நாமக்கல் என்றாலே முட்டையும், பொது தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் பள்ளிகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால் நாமக்கலில் பல அழகான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். 'மவுண்டெயின் ஆஃப் டெத்' எனப்படும் கொல்லி மலை, பல்வேறு பாறை கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள், வரலாற்று பாரம்பரியம் நிறைந்த கோவில்கள் பல இருக்கின்றன. நீங்கள் நாமக்கலுக்கு செல்லும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகான இடங்களை காணத் தவறாதீர்கள்!

கொல்லி மலை
'மரண மலை' என்று பொருள்படும் ஒரு அச்சுறுத்தும் பெயருடன், கொல்லிமலை நாமக்கலின் பிரதான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இந்த இடம் ஒப்பீட்டளவில் வணிக சுற்றுலாவால் இன்னும் தீண்டப்படாமல் இருக்கிறது மற்றும் அதன் இயற்கையான மகத்துவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதிகபட்ச எண்ணிக்கையிலான ஹேர்பின் வளைவுகளுடன், இந்த மலைவாசஸ்தலத்தின் மயக்கும் அழகைக் காணலாம். வளைந்த சாலைகள் மற்றும் அழகிய இயற்கைக்காட்சிகள் கொல்லிமலையை சாலைப் பயண ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக ஆக்குகிறது. மலையின் உச்சியில் இருந்து பள்ளத்தாக்கின் பரந்த காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி கொல்லிமலை வழியே விறுவிறுப்பான ஓடையாக 300 அடி உயரத்தில் இருந்து விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஒரு வித பிரமிப்பை கொடுக்கிறது. அருவி அதன் இயற்கையான உற்சாகத்திற்காக மட்டுமல்ல, அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் விழுவதால் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. ட்ரெக்கிங் செய்ய விரும்புபவர்களும் இது ஒரு அருமையான ஸ்பாட்டாகும்.

ஆஞ்சநேயர் கோவில்
திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த ஆஞ்சநேயர் கோவில் நாமக்கலில் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை இந்தியாவின் மிக உயரமான அனுமனின் சிலைகளில் ஒன்றாகும். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய வாரியத்தால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கோவிலின் கட்டமைப்பும் சுற்றுப்புற சூழலும் நமக்கு மன அமைதியை தருகிறது.

சித்தர் குகைகள்
கொல்லிமலையில் உள்ள சித்தர் குகைகள் புனிதமானவை மற்றும் அமைதியானவை. முனிவர்கள் இங்கு வாழ்ந்து பல்வேறு மருத்துவ மூலிகைகளை வளர்த்து சிறப்பு சிகிச்சை முறைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மூலிகைகள் இன்றும் குகைகளைச் சுற்றிக் காணப்படுகின்றன. இந்த இடத்தை சுற்றிப் பார்ப்பதன் மூலம் ஒரு வித ஆன்மீக உணர்வை உணர முடியும்.

சீகு பாறை வியூபாயின்ட்
நாமக்கல்லில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலம் சீகு பாறை காட்சிப் புள்ளியாகும். சீகு பாறை வியூபாயிண்ட், அழகான மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளின் ஒரு பார்வையைப் பிடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாகும். வியூபாயின்ட்டை அடைய பயணிகள் சற்று மேலே ஏற வேண்டும். அதிகாலை மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது இங்கு சென்றால் நிச்சயம் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

நாமக்கல் கோட்டை
நாமக்கல் கோட்டை அல்லது பாறைக் கோட்டை, ஒரே பாறையால் ஆன குன்றின் மேல் அமைந்துள்ளது, இது நாமக்கலின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இன்று வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. இந்த கோட்டை ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோட்டைக்குள் இரண்டு மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன: ஒன்று மசூதி மற்றொன்று நரசிம்ம ஸ்வாமி கோயில் ஆகும்.

அறப்பளீஸ்வரர் கோவில்
நாமக்கல்லில் உள்ள அரபளீஸ்வரர் கோயில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது மற்றும் சோழ வம்சத்தின் மன்னர் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. ராசிபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் முடிவடையும் கோவிலுக்கு கீழே ஒரு மறைவான பாதை இருப்பதாக கூறப்படுகிறது. கோயிலின் எளிமையான கட்டிடக்கலை கோயிலின் புனிதத்தன்மைக்கு அழகை சேர்க்கிறது.

நரசிம்ம சுவாமி கோவில்
எட்டாம் ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் நாமக்கலின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. நாமக்கல் கோட்டையின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டுள்ள இந்த கோவில் பாரம்பரிய பாறை மற்றும் திராவிட கட்டிடக்கலை பாணியை எதிரொலிக்கிறது. நீங்கள் கோட்டையை காணவும் இந்த அற்புதமான கோவிலைக் காணவும் இங்கு வருகை தரலாம்.



Click it and Unblock the Notifications





