கடினமாக உழைத்து, வாரம் முழுவதும், சோர்வுற்ற நம் ஆன்மாக்கள் அமைதியின் சில தருணங்களை விரும்பி மகிழ்ச்சியடைகின்றன. அதிர்ஷ்டவசமாக, சென்னைக்கு அருகில் ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன, அங்கு நீங்கள் ஒரு குறுகிய பயணத்தைத் திட்டமிடலாம், இந்த வார இறுதியை சூப்பரா என்ஜாய் பண்ணலாம். கண்ணுக்கினிய கடற்கரைகள் மட்டுமின்றி, வினோதமான மலைவாசஸ்தலங்கள், பழங்கால நகரங்கள், அமைதியான நிலப்பரப்புகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல அழகான சுற்றுலாத் தலங்கள் உள்ளடக்கிய சிறந்த வார இறுதி நாட்களின் பட்டியல் இங்கே.
ஆரே நீர்வீழ்ச்சி
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரே நீர்வீழ்ச்சி ஒரு சின்ன ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழகான சூழலால் அலங்கரிக்கப்பட்டுள்ள நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறியதா ஒரு ட்ரெக்கிங் பண்ணினா போதும், அந்த அழகான ஸ்பாட்களில் நாம என்ஜாய் பண்ணலாம். இந்த இடத்தில் இருக்கிற பசுமையும், சிறு சிறு ஓடைகளும், குளங்களும், அழகான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், கூழாங்கற்கள் என அந்த இடம் முழுவதுமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. ஆரே நீர்வீழ்ச்சி சென்னையிலிருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

புலிகட் ஏரி
தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. புலிகட் ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது. பழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
முட்டுக்காடு
சென்னையில் இருந்து முக்கால் மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த முட்டுக்காடு படகு சவாரி, விண்ட்சர்ஃபிங், கயாக்கிங், கேனோயிங் மற்றும் நீச்சல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற இந்த சுற்றுலாத் தலம் அதன் உப்பங்கழிகள் மற்றும் பனை தோப்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு சிறிய குக்கிராமமாகும். கைவினைப்பொருட்கள் மற்றும் கலை காட்சிக்கு பெயர் பெற்ற தக்ஷிண சித்ரா கிராமம், கோவ்லாங் கடற்கரை, முதலை வங்கி, V.G.P கோல்டன் பீச் ரிசார்ட் மற்றும் MGM டிஸ்ஸி வேர்ல்ட், ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஆகியவை முட்டுக்காடு பகுதியை சுற்றி அமைந்திருப்பதால் அவற்றையும் நீங்கள் ஆராயலாம்.

மாமண்டூர் காடுகள்
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும்.
வேடந்தாங்கல்
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள வேடந்தாங்கல், அதன் பறவைகள் சரணாலயத்திற்கு மிகவும் பிரபலமானது. சரணாலயம் சுற்றி கட்டப்பட்டுள்ள 30 ஹெக்டேர் பரப்பளவுள்ள சிறிய தண்ணீர் தொட்டியில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்ந்த காலங்களில் குறைந்தது 30,000 பறவைகள் வசிக்கின்றன. இந்த சரணாலயத்தில் ஹெரான்கள், ஸ்பூன்பில்கள், நாரைகள், ஐபிஸ்கள் மற்றும் எக்ரேட்கள் தொடங்கி ஏராளமான பறவைகளை நீங்கள் காணலாம்.

காஞ்சிபுரம்
ஆயிரம் கோவில்களின் தங்க நகரம் என்று அன்புடன் அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு நாட்கள் அல்ல, இரண்டு மாதங்கள் கூட பத்தாது. புகழ்பெற்ற அத்திவரதர் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி கோவில், பஞ்சபூத காற்று ஸ்தலமான ஏகாம்பரேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களுக்கு சென்று ஆசி பெற்று வாருங்கள். அங்கு கிடைக்கும் காஞ்சி பட்டுப்புடவைகளை உங்கள் மனைவிக்கும் அம்மாவுக்கும் வாங்கி கொடுத்து மகிழுங்கள்.
தடா நீர்வீழ்ச்சி
சென்னையின் பிஸியான வாழ்வில் இருந்து ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க ஒரு அற்புதமான ஸ்பாட் இது. பச்சை பசேல் சூழலில, ஜில்லுனு விழுற அருவி தண்ணியில குளிச்சி ஆட்டம் போட ஒரு சூப்பர் ஸ்பாட்டா இருக்கிற இடம் தான் இந்த தடா நீர்வீழ்ச்சி! சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.

நாகலாபுரம் மலைகள்
சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. நாகலாபுரத்திற்கு உங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது. செக் போஸ்டை ஒட்டியிருக்கும் பார்க்கிங்கில் உங்களது கார் அல்லது பைக்கை பார்க் செய்துவிட்டு. அங்கிருந்து நடக்க ஆரம்பிக்கலாம். 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது.



Click it and Unblock the Notifications





