தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு, இது தேசம் முழுவதிலும், சர்வதேச அளவிலும் புகழ்வாய்ந்தது. நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடம் ஆகும். அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் இங்கே காணப்படுகின்றன. முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும். வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
ஊட்டி அருகே இருக்கு மொய்யாறு நதி பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்

மொய்யாறு
மசிங்குடி-ஊட்டி சாலையில் இருக்கும் மொய்யாறு நகரில் இருந்து உருவாகும் மொய்யாறு நதி பவானியின் கிளை நதி ஆகும். முதுமலை சரணாலயத்தையும் பந்திப்பூரையும் பிரிக்கும் இயற்கை பிளவாக இந்த நதி அமைகின்றது. இந்த நதியில் நீர் அருந்த அதிகமான மிருகங்கள் வருகின்றன, அவற்றை காண்பதற்கு இது ஒரு சிறந்த இடமாக திகழ்கின்றது. மொய்யாறு பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் மொய்யாறு நதி இடுக்குவழி இருபது கிலோமீட்டர் ஆழம் உடையது. மொய்யாறு நதியில் தோண்டப்பட்டு உள்ள ஒரு பெரிய குழியின் வழியாக மொய்யாறு நதிநீர் வழிந்தோடுவது, மொய்யாறு அருவி உருவாக காரணமாக இருக்கிறது. இந்த நதியின் ஓரத்தில் பல சுற்றுலா பயணிகள் பார்வையிடக்கூடிய பல சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. முதுமலை தேசிய பூங்காவிற்கு உணவளிக்கும் முக்கிய நதியாக மொய்யாறு நதி திகழ்கின்றது. அமைதியான இயற்கை காட்சிகளை காண விரும்புவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது
D momaya

அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் யானைகள் உணவு அருந்தும் இடத்திற்கு அருகே இருக்கிறது. பல ஆண்டுகளாக முதுமலையில் அலைந்து திரிந்த விலங்குகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தில் சற்று வரலாற்றை பார்வையிடலாம், இந்த காட்டில் முன்பு வசித்த உயிரினங்களையும் பதப்படுத்தப்பட்ட நிலையிலும், இப்போது அவற்றின் இனம் எப்படி இருக்கிறது என்பன போன்ற விஷயங்கள் பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும்.
Anand2202

முதுமலை
முதுமலையிலும் அதை சுற்றுலும் பார்க்க வேண்டிய நல்ல இடங்கள் பல இருக்கின்றன. பைக்காரா ஏரியின் அருகே இருக்கும் பிரதான சாலையில் இருக்கும் பாலம் பல்வேறு வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க சிறந்த இடம் ஆகும். காலாட்டி நை மற்றும் மொய்யாறு நதியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள வரும் பல விலங்குகளை காணலாம். தமிழ்நாடு சுற்றுலாதுறை & வளர்ச்சி வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவை அளிக்கும் படகு சவாரி மற்றும் காட்டு சவாரிகள் வெளிநாட்டு தாவரங்களையும், விலங்குகளையும் பார்வையிட வாய்ப்பு அளிக்கின்றன. ஊட்டியில் இருந்து முதுமலை சரணாலயத்திற்கு காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் அருவிகள் ஊடாக செல்லும் போது முப்பத்து ஆறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. விலங்குகளையும் பறவைகளையும் அவற்றின் இயற்கை வசிப்பிடத்தில் காண்பதற்கு ஏற்ற இடங்களாக இவை அமைந்துள்ளன.
wiki

தெப்பக்காடு யானை முகாம்
1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன. காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். இந்த தடித்த உயிரினத்தை குறித்த கல்வியை பரப்புவதற்கு இது ஒரு கல்வி நிலையமாகவே செயல்படுகின்றது. சுற்றுப்புறம் சார்ந்த சுற்றுலாவுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மனித-யானை பகைகளை தீர்த்துக்கொள்ளவும், அந்த மிருகத்தை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த தெப்பக்காடு யானை முகாம் உதவுகின்றது.
பார்வை நேரம் : காலை 5:30 - மாலை 6:00 நுழைவு கட்டணம் : ரூ.50



Click it and Unblock the Notifications




