மிகவும் வசதியான மற்றும் மலிவான பயணம் என்பதனால் இந்தியாவின் முதுகெலும்பு போக்குவரத்தாக தினமும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு சேவை செய்கிறது. இருப்பினும், இரவு நேர ரயில் பயணத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக நீண்ட வழித்தடங்களில், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதிசெய்ய ரயிலில் சில இரவு விதிகளைப் பின்பற்றுவது அவசியம். இந்த விதிகளை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது உங்களுக்கும், சக பயணிகளுக்கும் தொந்தரவில்லாத ஒரு பயணத்தை வழங்கும்!!
ரயில்வேயில் உள்ள இரவு விதிகள்
பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், சர்ச்சைகளைக் குறைக்கவும், நீண்ட தூர ரயில்களில் ஸ்லீப்பர் பெர்த்களைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகளை இந்திய ரயில்வே திருத்தியுள்ளது. புதிய விதிமுறைகள், அனைத்து பயணிகளின் தேவைகளையும் சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில், ஒரு சிறிய மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், தூக்க நேரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இந்திய இரயில்வே இரவில் பயணிக்கும் பயணிகளுக்கு பல விதிகளை கொண்டுள்ளது. மற்ற பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் தூங்கும் நேரத்தில் மாற்றம்
சமீபத்தில், ரயில்வே ரயிலில் பயணிகள் தூங்கும் நேரத்தை மாற்றியுள்ளது. புதிய விதியின்படி, ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் முந்தையதை விட குறைந்துள்ளது. முந்தைய பயணிகள் தங்கள் பயணத்தின் போது 9 மணி நேரம் தூங்கலாம். ஆனால் இப்போது இந்த நேரம் 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, இப்போது நீங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க முடியும். முன்பு இந்த நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது.
மிடில் பெர்த் பயணிகள் கவனத்திற்கு
காலை 6 மணிக்கு நடு இருக்கையை நீங்கள் கீழே இறக்குவது அவசியம். மேலும், நீங்கள் கீழ் இருக்கைக்கு மாற வேண்டியிருக்கும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். புதிய விதியின்படி, கீழ் பெர்த்தில் பயணிக்கும் முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் இரவு 10 மணிக்கு முன்போ அல்லது காலை 6 மணிக்குப் பிறகும் தங்கள் இருக்கையில் தூங்க முயற்சிக்கக்கூடாது. இந்த விதிகளை ஒரு பயணி மீறினால், ரயில்வே மீது புகார் அளிக்கலாம்.

விளக்குகளை எரிய வைக்கக்கூடாது
இரவு 10 மணிக்குப் பிறகு, தூங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க, பெட்டியில் உள்ள பொது விளக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும். நம் வசதிக்கு ஏற்றார் போல விளக்குகளை எரிய வைக்க அனுமதி இல்லை. நீங்கள் படிப்பது அல்லது எழுதுவது என்று ஏதாவது செய்தால் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் ரீடிங் லைட்களைப் பயன்படுத்தலாம்.
சத்தமாக பேசவோ, இசை கேட்கவோ கூடாது
இரவு 10 மணிக்கு மேல் சத்தமாக பேசுவது, இசையை வாசிப்பது அல்லது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய பிற செயல்பாடுகளை தவிர்ப்பது அவசியம். நீங்கள் இசை கேக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் கூட அல்லது வீடியோவைப் பார்க்கும்போது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தலாமே தவிர, ரயிலில் பயணிக்கும் போது இயர்போன் இல்லாமல் அதிக டெசிபலில் அவர்களின் இசையைக் கேட்க முடியாது.
கேட்டரிங் மற்றும் விற்பனையாளர் கட்டுப்பாடுகள்
இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் வியாபாரிகள் அல்லது விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வரும் நேரத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் கேட்டரிங் சேவையும் இயங்காது என்பதால் முன்கூட்டியே உணவு வாங்கி வைத்திருப்பது அவசியம்.
இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியாது
இந்திய ரயில்வேயின் வழிகாட்டுதல்களின்படி, அமைதியான சூழலை உறுதி செய்வதற்கும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கும் வகையில், இரவு 10 மணிக்குப் பிறகு ரயில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், மருத்துவச் சிக்கல்கள், பாதுகாப்புக் கவலைகள் அல்லது அவசர பெர்த் தகராறுகள் போன்ற அவசரநிலைகளை TTE ஐ தொடர்புக் கொள்ளலாம்.
இந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய ரயில்வே விதிகளின்படி, அபாயகரமான அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. வெடிபொருட்கள், எரியக்கூடிய பொருட்கள் (எ.கா., பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர்கள்), பட்டாசுகள், நச்சு இரசாயனங்கள் அல்லது அரிக்கும் பொருட்கள் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மீறுபவர்கள் கடுமையான அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரயில்வே சட்டம், 1989 இன் கீழ் இரண்டையும் சந்திக்க நேரிடும்
இந்திய ரயில்வேயின் சங்கிலி இழுக்கும் விதி
ரயிலில் சங்கிலிகளைப் பார்க்கும்போது, நாம் அடிக்கடி பரிசோதனை செய்ய விரும்புகிறோம். ஆனால் காரணமே இல்லாமல் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது சட்டப்படி குற்றம் தெரியுமா? ரயிலில் உள்ள அலாரம் செயின் சிஸ்டம் அவசரத் தேவைக்கானது. ரயிலில் ஒரு துணை, குழந்தை, முதியவர் அல்லது ஊனமுற்ற நபர் ரயிலைத் தவறவிட்டால், ரயிலில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மற்றும் பிற அவசரநிலைகளில் மட்டுமே ரயிலில் சங்கிலி இழுக்க அனுமதிக்கப்படுகிறது. ஓடும் ரயிலில் சங்கிலியை இழுப்பதற்கு உறுதியான காரணம் இருக்க வேண்டும்.
லக்கேஜ் தொடர்பான விதிகள்
ஏசி பெட்டியில் இருந்து ரயிலில் பயணம் செய்தால், அதிகபட்சமாக 70 கிலோ லக்கேஜ், ஸ்லீப்பர் கிளாஸ் 40 கிலோ மற்றும் இரண்டாம் வகுப்பு 35 கிலோ லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஏசி வகுப்பில் கூடுதல் லக்கேஜ் கட்டணத்துடன், நீங்கள் 150 கிலோ, ஸ்லீப்பரில் 80 கிலோ, மற்றும் இரண்டாவது உட்கார்ந்து 70 கிலோ பை மற்றும் சாமான்களை எடுத்துச் செல்லலாம்.



Click it and Unblock the Notifications




