பரந்துபட்ட பிரதேசமாக விரிந்து காணப்படும் இந்த நீல நிறப் பிரதேசம், அநேக உயிர் ரகசியங்களை தன்னுள் உள்ளடக்கியுள்ளது. அப்படிப்பட்ட நீல நிறப் பிரதேசம், மனிதனின் பரிணாம வளர்ச்சியிலும், வணிகத்திலும் பெரும் பங்காற்றி உள்ளன என்றால் மிகையல்ல.
பரந்துப்பட்ட நீல நிற நிலப்பரப்பில், இயற்கை என்ற பேரழகியை, தன்னுள் மறைத்து வைத்திருக்கும் மாயக்காரி. பெரும்பாலும், இந்த பேரழகியை காண, தொலைதுார அண்டை நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு மேலோங்கி இருக்கும்.
ஆனால், அப்படி இல்லை என்றே கூறுவேன் நான். நீல நிறப் பேரழகியை, தென்னிந்தியாவில் ஓரிரு இடங்களுக்கு சென்றால் கண் குளிர ரசிக்கலாம் என்பதே நிதர்சனமாக உண்மை.
கடற்கரை பயணம் என்பது இயற்கை அழகு, கலாசார பன்முகத்தன்மை மற்றும் உங்கள் குடும்பத்துடன் அற்புதமான நினைவுகளை உருவாக்குவதற்கான வரம்பற்ற சாத்தியக்கூறுகளை இணைக்க ஒரு அருமையான வழியாகும்.
அதுவும் தென்னிந்திய மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள கடற்கரைகள், மாசற்ற மணல், தெளிவான நீர் மற்றும் மூச்சடைக்கக்கூடிய இயற்கைக் காட்சிகளுக்கு நன்கு அறியப்பட்டவை.

நீங்கள் விரும்பும் நபர்களுடன் கைகளைப் பிடித்துக் கொண்டு கரையோரத்தில் உலா வருவதை கற்பனை செய்து பாருங்கள். அப்போது தெரியும் உங்கள் கால்களுக்குக் கீழே மென்மையான மணல் மற்றும் கணுக்கால்களில் அமைதியான அலைகள் சில்லென்று தழுவி விட்டு செல்லும்.
உங்கள் குழந்தைகளுடன் மணல் கோட்டைகளை உருவாக்குவது, கடற்பாசிகளை சேகரிப்பது முதல் பீச் வாலிபால், ஸ்நோர்கெலிங் மற்றும் கயாக்கிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது வரை, இந்த கடற்கரைகள் பல குடும்ப நட்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழலை வழங்குகின்றன.
இந்த அமைதியான அமைப்பில், புத்துணர்ச்சியூட்டும் கடலை ரசிக்கும் போது, அனைவரும் சூரிய குளியல் மேற்கொள்வதோடு, ஓய்வெடுக்கலாம். எனவே, கோடையில் மட்டுமில்லை; இந்த மான்சூன் நேரத்திலும் உங்கள் குடும்பத்தினருடன் பார்வையிட வேண்டிய சிறந்த கடற்கரையின் பட்டியலை தருகிறேன்.
அப்பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, எண்ணற்ற நினைவுகளை உங்களுக்குள் இந்த கடற்கரையும், அதன் அழகும், அங்கிருக்கும் பேரழகியும் உருவாக்க தவறமாட்டார்கள் தானே...!
வர்கலா
கேரள மாநிலத்தில் உள்ள பகுதி வர்கலா கடற்கரை. மூச்சடைக்கக் கூடிய பாறைகள், நீச்சல், பாராகிளைடிங், சூரிய குளியல், இயற்கை கனிம நீரூற்றுகள் மற்றும் பழங்கால கோவில்கள் ஆகியவை சூழ, கலாசாரம் சார்ந்தவற்றுடன் மூழ்கி போவதுடன் உள்ளூர் சந்தை பகுதிகளுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம் போங்க...!

கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமரி. அங்குள்ள கடற்கரை, அருகில் உள்ள விவேகானந்தர் பாறை, அழகிய சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகள் நம் மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். அந்தளவுக்கு தன்னை பார்க்க வருபவர்களை தன் அழகால் வசீகரிக்கும் பேரழகி.
கோழிக்கோடு
கேரளாவின் கோழிக்கோடு கடற்கரையானது வரலாற்று வசீகரம். இரண்டு தூண்கள், ஒரு கலங்கரை விளக்கம், சூரிய அஸ்தமனம், மலபார் உணவுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் அமைதியான கடலோர அனுபவத்தை வழங்குகிறது.

ஆலப்புழா
'அலெப்பி பீச்' ஒரு அமைதியான இடமாகும். இது, பிக்னிக்குகளுக்கு ஏற்றது. தடாகங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றுடன் ஒரு வரலாற்று கலங்கரை விளக்கத்தைக் கொண்டிருக்கிறது. மாசற்ற மணல்கள், தெளிவான நீர், மூச்சடைக்கக்கூடிய இயற்கைக்காட்சிகளுடன், இந்த கடற்கரைகள் மணலில் கோட்டைகள் எழுப்புவதோடுஸ, சீஷெல் சேகரிப்பு மற்றும் கடற்கரை கைப்பந்து, ஸ்நோர்கெலிங் மற்றும் கயாக்கிங் போன்ற நீர் விளையாட்டுகளை, உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் விளையாட தடையில்லை.

கோவளம்
கேரளாவின் கோவளம் கடற்கரை மற்றும் அதன் அருகேயுள்ள மூன்று மாசற்ற கடற்கரைகளின் அழகையும், பனை மரங்கள், ஆயுர்வேத மசாஜ் நிறுவனங்கள், கடல் உணவு உணவகங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளுடன் மாநிலத்தின் கடலோரத்தின் அழகை தடையின்றி வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பொதுவாக, பல கடற்கரைகளில் நீங்கள் கைவினைப் பொருட்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் பிராந்திய சிறப்புப் பொருட்களை வாங்கக்கூடிய பரபரப்பான சந்தைகளுக்கு பஞ்சம் இருக்காது. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்று கூறுவதை மனதில் நிறுத்தி கொண்டு, பாதுகாப்புடன் கடற்கரை என்ற பேரழகியை ரசித்து விட்டு வாருங்கள் உங்களுக்கு பிடித்தமான நபர்களின் கைகளை தழுவியவாறே, பிஞ்சு பாதத்தின் மென்மை போன்ற மணற் பரப்புகளில் சில்லென்ற நீரில் உங்கள் பாதங்களையும் நனைத்து விடவும் ஒரு முறையாவது...! கற்பனை குதிரையை தட்டி விடுங்கள் இப்போதே....!



Click it and Unblock the Notifications





