சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான காசி விஷ்வநாத் ஆலயம், உத்தரகாசியின் மிகவும் புகழ்மிக்க சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கே காணப்படும் சிவ லிங்கா அல்லது சிவபெருமான் சிலையானது 90 செ.மீ. சுற்றளவிலும், 60 செ.மீ. உயரத்திலும் காணப்படுகிறது. இந்த ஆலயம், பாகிரதி நதிக்கரையில் காணப்பட, புகழ்மிக்க ஆடம்பரத்துடன் முக்கியத்துவத்தையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.
வட இந்தியாவின் கலாச்சார தலைநகரத்தில் காணப்படும் இந்த ஆலயம், நெகிழ செய்யும் நதியை தழுவியை மலையையும் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வெளி அறையானது கணேஷா மற்றும் பார்வதி தேவியின் சிலைகளை கொண்டு காணப்படுகிறது. இதனை பொற் கோவில் எனவும் அழைக்க, அதற்கு காரணமாக மூன்று குவிமாடமானது சுத்த தங்கத்திலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் உலோக திரிசூலம் காணப்பட, அதன் சிறப்பம்சமாக நாகா வம்சத்தின் கல்வெட்டும் 26 அடி உயரத்தில் காணப்படுகிறது.

காசி விஷ்வநாத் ஆலயத்தின் வரலாறு:
பரசுராம் என்னும் முனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயம், சுதர்சனன் ஷா மனைவியான மகாராணி கானேதியால் 1857ஆம் ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. சாக்ஷி கோபால் மற்றும் மார்கேண்டயா துறவி தியானிப்பது போன்ற உருவானது, பழங்காலத்தில் உருவாக்கப்பட, தற்போதும் அது காணப்படுகிறது. இதனால் இந்தோ - திபெத்திய கலாச்சார மாற்றத்தின் முக்கியத்துவமானது அந்த காலத்தில் தெரியவர, அதற்கு ஆதாரமாக ஆலயத்தில் திபெத்திய கல்வெட்டுக்களும் காணப்படுகிறது.
PC: Atudu

காசி விஷ்வநாத் ஆலயத்தின் கட்டிடக்கலை அமைப்பு:
இந்த ஆலயமானது வழக்கமான பழங்காலத்து இந்திய கட்டிடக்கலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்க, இந்தியாவின் பலப்பகுதிகளில் பல இந்திய ஆலயங்கள் இதனால் ஈர்க்கப்பட்டும் இருக்கிறது. இந்த ஆலயத்தில் மூன்று பிரிவுகளானது காணப்பட - காசி விஷ்வநாத் கடவுளின் உச்சம், தங்க குவிமாடம், மற்றும் தங்க சிகரத்தின் கொடி அல்லது திரிசூலம் அவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயமானது புனிதம் கொண்ட இடமாகவும், யான்வபி மசூதியையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆலயமும் பல்வேறு கடவுளின் சிலையை கொண்டிருக்க அவை விஷ்ணு, சனீஸ்வரன், விருபக்ஷ கௌரி, அவிமுக்தேஷ்வரா, விருபக்ஷா, விநாயகா, தண்டபானி என பல கடவுளையும் நிறுவப்பட்டு காணப்படுகிறது. ஓர் வெள்ளி பலிபீடம் சிவலிங்கத்தை தாங்கியபடி, ஆலயத்தின் கருவறை உள்ளே காணப்படுகிறது.
PC: Dibendu Nandi

காசி விஷ்வநாத் ஆலயத்தின் உள் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்படும் சுற்றுலாவினருக்கான ஈர்க்கும் இடங்கள்:
உள்ளூர் மற்றும் சுற்றுலாவினருக்கான தலைசிறந்த விடுமுறை இடங்களுள் ஒன்றாக உத்தர காசி காணப்படுகிறது. நீங்கள் இதனால் பயணம் மற்றும் ஏற்ற இடங்களை கண்டிட, நெகிழ்ச்சியான பின்புலமும், வனவிலங்கு வாழ்க்கை என கலவையான காட்சி அமைப்புடன் இவ்விடமானது காணப்படுகிறது. இங்கே காசி விஷ்வநாத் ஆலயத்துக்கு வருதனால் காண வேண்டிய ஒரு சில ஈர்க்கும் இடங்கள் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
PC: Nikhilchandra81

டொடிட்டல் ஏரி மற்றும் நாச்சிக்கேட்டா ஏரி:
பயண ஆர்வலர்களுக்கான கனவு இலக்காக காணப்படும் டொடிட்டல் ஏரி, ஆல்பைன்களை கோபுரத்தில் கொண்டிருக்க, ஓர் படிக தூய்மையான ஏரியானதும், கண்கவர் காட்சியை பின்புலத்தில் தருகிறது.
மினி வாசஸ்தலமாக காணப்படும் அழகிய இடமான நாச்சிக்கேட்டா ஏரி, காதலில் நம்மை விழ வைத்திட, இங்கே நாம் வர வேண்டியதும் அவசியமாகிறது.

டொடிட்டல் டயரா கணவாய் பயணம்:
கடல் மட்டத்திலிருந்து 3024 மீட்டர் உயரத்தில் காணப்படும் இந்த இடத்திற்கான பயணம், வீணாக்கப்படாத இயற்கை அழகை கொண்டு காண, சாகச தனிமங்கள் இங்கே பல காணப்பட, அவை நம்மை ஆராய்ந்திடவும் தூண்டுகிறது.
டயரா புக்யால் பயணம்:
மாபெரும் இமாலயத்தின் அற்புதமான பின்புலமாக காணப்படும் இவ்விடம், மதிமயக்கும் ஆல்பைன் புல்வெளிகளையும் இப்பகுதியில் கொண்டிருக்கிறது.
நேரு மலைப்பாங்கான மையம்:
இந்தியாவிலேயே முதன்மையான தன்னாட்சி நிறுவனங்களை கொண்டிருக்கும் மையங்களில் ஒன்றாக இது இருக்க, அனைத்து மலை விரும்பிகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது.
PC: Shubhang99

உத்தரகாசியை நாம் அடைவது எப்படி?
ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?
பபத்பூரின் லால் பஹதூர் சாஷ்திரி சர்வதேச விமான நிலையம் தான் ஆலயத்தின் அருகாமையில் காணப்படுமோர் விமான நிலையமாகும். கார் மற்றும் தனியார், அரசு பேருந்துகள் மூலமாக விமான நிலையத்திலிருந்து ஆலயத்தின் அடிவாரத்தில் நம்மை இறக்கி விடவும்படுகிறது.
தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?
வாரனாசியின் முக்கியமான மெட்ரோக்கள் மூலமாக தண்டவாளத்துடன் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. வாரனாசி நகர நிலையம், வாரனாசி சந்திப்பு, மண்டுவாடிஹ் நிலையம் மற்றும் முகலாசாரை சந்திப்பு நிலையங்களும் 2 கிலோமீட்டர், 6 கிலோமீட்டர், 4 கிலோமீட்டர் மற்றும் 17 கிலோமீட்டரில் காணப்பட, இந்த தூரங்கள் ஆலயத்திலிருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை மார்க்கமாக அடைவது எப்படி?
இவ்விடமானது பொது மற்றும் தனியார் பேருந்துகளின் வரிசையை கொண்டிருக்க, கார்களும் முக்கிய நகரத்துக்கும், உத்தர பிரதேச நகரத்துக்கும் வந்த வண்ணம் இருந்துக் கொண்டிருக்கிறது.
PC: Rakesh Bishnoi

காசி விஷ்வநாத் ஆலயத்தை நாம் காண சிறந்த நேரங்கள்:
கோடைக் காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன்) வரை சூடாக, வரண்டு, ஈரப்பதம் மற்றும் வெயில் காணப்படுகிறது. இந்த காலத்தில் வெப்ப நிலையானது 32 முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது.
பருவமழைக் காலத்தில் (ஜூலை முதல் செப்டம்பர்) மாபெரும் இயற்கையை நாம் ரசிக்க ஏதுவாக அமைந்து குதூகல அனுபவத்தை மனதில் விதைத்திடுகிறது.
குளிர்க் காலத்தில் (நவம்பர் முதல் மார்ச்) வெப்ப நிலையானது 5 முதல் 15 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே காணப்படுவதால், உத்தர காசியை நாம் காண சிறந்த காலமாக இதுவும் அமைகிறது.



Click it and Unblock the Notifications




