இந்த கட்டுரை புதையல்களைப் பற்றியது. இதுவரை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அல்லது கணக்கெடுக்கப்பட்ட கைப்பற்றப்படாத புதையல் களின் மதிப்பையும், அவை உள்ள இடங்களையும் பற்றி அறிய இந்த கட்டுரை உங்களுக்கு உதவும். இந்த புதையல்களெல்லாம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த புதையலைத் தேடி சென்ற பலர் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். மீதி சிலர் உயிரிழந்துள்ளனர்.
போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!
புதையல் இருக்கும் இடங்களிலெல்லாம் மரணத்திற்கான அழிவுப்பாதையும் இருக்கும் என்பது முற்கால நம்பிக்கை. உயிரை துச்சமென நினைத்து சென்றால் மட்டுமே இந்த புதையல்கள் கிடைக்குமாம். இந்த புதையல்கள் மறைந்துள்ள இடங்களை இப்போது நாம் காணலாம் வாருங்கள்.
நாம் இதுவரை முதல் நான்கு புதையல்கள் இருக்கும் இடத்தைப் பார்த்தோம். இப்போது மீதி இடங்களைப் பார்க்கலாம். இந்த கட்டுரையின் முந்தைய பகுதியை காண கிளிக் செய்யவும்
சோன்பந்தர் குகைகள் பீகார்
சோன்பந்தர் குகைகள் பீகார்
சோன்பந்தர் குகைகள் பீகார்
பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் இந்த இரண்டு குகைகளும் அமைந்துள்ளன.
இந்த குகைகள் ஒரு பெரும் பாறையால் விழுங்கப்பட்டிருப்பதைப் போன்று தோற்றமளிக்கும்
Aryan paswan
பழமை
இது மிகவும் பழமையானது. அதாவது மூன்றாவது நூற்றாண்டிலே உருவானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு அறைகள் அந்த காலத்தில் வாழ்ந்த அரசர் பிம்பிசாராவின் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்ட அறையாக கருதப்படுகிறது.
Dharma
ஓவியங்களும், கல்வெட்டுக்களும்
அதன் சுவர்களில் பல்வேறு வகையான ஓவியங்களும், கல்வெட்டுக்களும் உள்ளன.
இந்த கல்வெட்டுக்களில் இந்த குகையை திறக்கும் க்ளூ இருப்பதாக நம்பப்படுகிறது. எப்போ கிளம்புறீங்க புதையலை எடுக்க
AmritasyaPutra
மிர் உஸ்மான் அலி பொக்கிஷங்கள்
மிர் உஸ்மான் அலி பொக்கிஷங்கள்
மிர் உஸ்மான் அலி பொக்கிஷங்கள்
மிர் உஸ்மான் அலி என்பவர்தான் ஹைதராபாத்தின் கடைசி நிசாம் ஆவார்.
இங்கிலாந்தை போன்றதொரு பரப்பு கொண்ட நாட்டை அவர் ஆட்சிசெய்தார்..
S N Barid
அதிபதி
அவர் ஆட்சி செய்த காலத்தில் பொன்னும் பொருளும் நிறைய அரசு கசானாவுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை அவருக்கு உண்டு..
2008ல் ஒரு பிரபல ஆங்கில நாளிதல் வெளியிட்ட கட்டுரையில் அவர் 210 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட சொத்துக்கு அதிபதி என குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்
டைம் இதழ் இவரை 1937ல் உலகின் மிகப் பெரிய பணக்காரராக அறிவித்துள்ளது.
1911ம் ஆண்டில் இவரது தந்தையின் மிதமிகுந்த பணக்கார வாழ்க்கையின் காரணமாக இவர்களின் அரசாங்க கசானா முற்றிலும் குறைந்துபோனது.
மிதமிஞ்சிய பொக்கிஷங்கள்
அதன் பிறகு இவரது 37 வருட ஆட்சியில் இவரது நாடு தன்னிறைவு பெற்று மிதமிஞ்சிய பொக்கிஷங்களை பூமிக்கடியில் புதையல் ஒன்றில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுதான் கிங்கொத்தி மாளிகை. அங்கு வைரம், வைடூரியம், தங்கம், ரூபி முதலிய விலையுயர்ந்த கற்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
முகலாய பொக்கிஷங்கள்
முகலாய பொக்கிஷங்கள்
முகலாய பொக்கிஷங்கள்
ராஜஸ்தானில் அமைந்துள்ள ஆல்வார் கோட்டை தலைநகர் டெல்லியிலிருந்து 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
முகலாய பேரரசர் ஜஹாங்கீர் ஒரு மாபெரும் புதையலை வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.
மர்ம புதையல்கள்
அது பல நேரங்களில் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், எனினும் அந்த இடத்தில் பல மர்ம புதையல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முகலாயர்களின் எழுச்சிக்கு முன்னால், இந்த பகுதியை ஆண்டவர்கள் மது குடிக்கும் கோப்பையை கூட எமரால்ட்டால் செய்து வைத்திருந்தனராம்.
அடுத்த இடத்த பாக்க இத கிளிக் பண்ணுங்க