பசுமையான நிலப்பரப்புகளுக்கும், அமைதியான உப்பங்கழிகளுக்கும் மற்றும் அழகிய கடற்கரைகளுக்கும் பெயர் போன இந்தியாவின் மிக அழகிய மாநிலம் - கேரளா. காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றின் விளைவுகளால் கேரளாவின் எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூரின் பகுதிகள் கடலுக்கடியில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது!

கேரளாவில் பல பகுதிகள் 2050 க்குள் கடலுக்கு கீழே
புதிய டிஜிட்டல் எலிவேஷன் மாடலின் (DEM) சமீபத்திய பதிப்பு, 2050 ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1 மீட்டர் உயரும் பட்சத்தில் கேரளாவின் அழகிய பகுதிகள் பல கடலுக்கடியில் மூழ்கும் அபாயத்தை உள்ளதாக தெரிவிக்கிறது. காலநிலை விஞ்ஞானிகளின் புதிய கணிப்புகளின்படி, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூரின் தாழ்வான பகுதிகள் யாவும் கடல் நீரால் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் கேரள பகுதிகள்
பிரின்ஸ்டனைத் தலைமையிடமாகக் கொண்ட க்ளைமேட் சென்ட்ரல், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் மற்றும் தொடர்பாளர்களின் ஒரு சுயாதீன குழுவால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் எலிவேஷன் மாடல், திருச்சூர் மாவட்டத்தில் மணக்கொடி, கூர்கெஞ்சேரி மற்றும் புறநாட்டுகர மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் தலையாழம், செம்மநத்துக்கரை, அச்சினகம் மற்றும் பிரம்மமங்கலம் போன்ற இடங்களை அதிக ஆபத்துள்ளதாகக் காட்டியுள்ளது.

அதிகரிக்கும் கடல் நீர் மட்டம் உயர்வு
2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) ஆய்வின்படி பெரிய கடலோர நகரங்களுக்கான ஆய்வு தெரிவிக்கிறது. வட இந்தியப் பெருங்கடலில் (NIO), கடல் மட்டம் 1874 மற்றும் 2004 க்கு இடையில் ஆண்டுக்கு 1.06 முதல் 1.75 மில்லிமீட்டர் வேகத்தில் உயர்ந்தது, மேலும் அடுத்த 25 ஆண்டுகளில், இந்த விகிதம் ஆண்டுக்கு 3 மில்லிமீட்டருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
2050 ஆம் ஆண்டிற்குள் ஏற்படும் பெரிய அபாயம்
அண்டார்டிகாவில் பனி உருகுவதால் கடல் மட்ட உயர்வின் விளைவாக ஏற்கனவே அசாதாரண மற்றும் தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளை அனுபவித்து வரும் மத்திய கேரளாவில் மிகப்பெரிய தாக்கம் உணரப்படும். கடல் மட்ட உயர்வு படி, 2050 ஆம் ஆண்டில், எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் ஆலப்புழாவின் குறிப்பிடத்தக்க பகுதிகள் மற்றும் திருச்சூரின் சில பகுதிகள் உட்பட நான்கு மாவட்டங்கள் கடல் மட்டத்திற்கு கீழே சென்றுவிடும்.

கேரள அரசின் நடவடிக்கைகள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல், நிலையான சுற்றுலா நடைமுறைகளை செயல்படுத்துதல் மற்றும் வெள்ள நிவாரணத் திட்டங்களைத் தொடங்குதல் போன்ற காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்துள்ளது. இருந்தாலும் கூட, கேரளா அதன் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் இந்த இருத்தலியல் அச்சுறுத்தலை போதுமான அளவில் எதிர்கொள்ள இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டும் என்று அறிவியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற மாநிலம், 2050-க்குள் அதன் பெரும்பாலான கடலோரப் பகுதிகளை இழக்கப்போவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!



Click it and Unblock the Notifications






