இது ரயில்வே பயணிகளுக்கான குட் நியூஸ் மக்களே! பயணிகளின் நலனுக்காக அவ்வப்போது சிறந்த ஆஃபர்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தியன் ரயில்வே தற்போது ஜெனரல் டிக்கெட்டை வைத்துக் கொண்டு ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்ய முடியும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை! இதை எப்படி உபயோகப்படுத்துவது என்று கீழே காண்போம்!
அதிரடி முடிவு எடுத்த இந்தியன் ரயில்வே
ஜெனரல் வகுப்பு டிக்கெட்டுகளுடன் நீண்ட தூர ரயில்களில் ஸ்லீப்பர் கோச்களில் அபராதம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இது தொடர்பான புதிய முயற்சியை இந்திய ரயில்வே அறிவிக்கும் என்பதால் இது விரைவில் நிஜமாக போகிறது.
குளிர்காலம் காரணமாக பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதிலாக ஏசி பெட்டிகளை தேர்வு செய்கின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு ஜெனரல் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு காலியாக உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை பயன்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
ஸ்லீப்பர் பெட்டிகளாக மாறும் ஜெனரல் பெட்டிகள்
80 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளுடன் ஸ்லீப்பர் பெட்டிகள் இயங்கும் அனைத்து ரயில்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அனைத்து பிரிவுகளின் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளது. பயணிகள் பயணம் செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் அனைத்து ஸ்லீப்பர் பெட்டிகளையும் ஜெனரல் பெட்டிகளாக மாற்ற ரயில்வே பரிசீலித்து வருகிறது.
ஸ்லீப்பர் கோச்சில் பயணிகள்
கடும் குளிரின் காரணமாக பயணிகள் ஏசி கோச்சில் பயணம் செய்கிறார்கள், ஏசி கோச்சில் குறிப்பிட்ட குளிர் மட்டுமே நிலவுகிறது. ஆனால் ஜெனரல் கோச்சில் குளிரானது மிகவும் அதிகமாக இருக்கிறது, அதனால் குளிர்காலத்தில் பல பயணிகள் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்யாமல் ஏசி கோச்சில் பயணிக்க விரும்புகிறார்கள், இதனால் ஸ்லீப்பர் கோச்சில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
அதிகரிக்கப்படும் பெட்டிகள்
அதே சமயம் இது தவிர பொது டிக்கெட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஸ்லீப்பர் கோச்சுக்கு பொதுப் பெட்டி அந்தஸ்தை வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதே போல ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.
நடுத்தர பெர்த்களை திறக்க முடியாது
இந்த பெட்டிகளுக்கு வெளியே முன்பதிவு செய்யப்படாதது எழுதப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது, ஆனால் இந்த பெட்டிகளில் நடுத்தர பெர்த் திறக்க அனுமதிக்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யாமல் ஏறலாம்
இப்போது, பொதுப் பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகள், ஸ்லீப்பர் பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல் கூட ரயிலில் ஏற முடியும். ஜெனரல் வகுப்பு பயணிகளுக்கு காலியான பெர்த்கள் உள்ள பெட்டிகளில் அவர்கள் இருக்கைகளை ஆக்கிரமிக்கலாம்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறும் பயணிகள் அபராதம் அல்லது கூடுதல் தொகை எதுவும் செலுத்த மாட்டார்கள். வழக்கமான பெட்டிகளில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான வழக்கமான பயணிகள் இந்த முடிவால் பயனடைவார்கள்.