இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் புவியியல் எல்லையான வாகா-அட்டாரி எல்லையை பார்வையிடாமல் அமிர்தசரஸ் பயணம் முழுமையடையாது. ஒவ்வொரு நாளும், எல்லையில் ஒரு சிறப்பு பீட்டிங் ரிட்ரீட் விழா நடைப்பெறுகிறது. அமிர்தசரஸில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவைக் காண வாகா எல்லைக்கு தினமும் வந்து செல்கின்றனர். வாகா எல்லையின் பீட்டிங் ரிட்ரீட் விழாவை காண கண் கோடி வேண்டும். நெஞ்சில் தேசப்பற்றை மேலோங்க வைக்கும் வாகா அட்டாரி எல்லை அமிர்தசரசில் இருந்து வெறும் ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. நீங்கள் ஏன் வாழ்வில் ஒரு முறையேனும் இங்கு செல்ல வேண்டும் என்று கீழே பாருங்களேன்!

இந்தியா பாகிஸ்தானை இணைக்கும் வாகா பார்டர்
வாகா எல்லை என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக்கோடு. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவினையின் போது திட்டமிடப்பட்டு, முடிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பிற்காக வாகா எல்லை வரைபடமும் சிக்கலான முறையில் உருவாக்கப்பட்டது. வாகா கிராமத்திலிருந்து கிழக்கே 600 மீட்டர் தொலைவில் இந்த எல்லை அமைந்துள்ளது.

வாகா-அட்டாரி எல்லை
இந்த எல்லையானது இந்தியாவின் லாகூர், பஞ்சாப் மற்றும் அமிர்தசரஸ் இடையே உள்ள பெரிய டிரங்க் சாலையில் மூலோபாய ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது. இது லாகூரிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், அமிர்தசரஸிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. அட்டாரி கிராமத்திலிருந்து வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இது வாகா-அட்டாரி எல்லை என்ற பெயரைப் பெற்றது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் ரிட்ரீட் விழா
பீட்டிங் ரிட்ரீட் விழா வாகா-அட்டாரி எல்லை விழா என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் இந்த விழாவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்கின்றனர். வாகா எல்லையில் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா தரப்பில் இருந்தும் பாகிஸ்தான் தரப்பில் இருந்தும் ஒரே நேரத்தில் தேசியக்கொடி ஏற்றி இறக்கப்படுகிறது.

தேசபக்தியைத் தூண்டும் விழா
இது பார்வையாளர்களின் கண்களிலும் உள்ளங்களிலும் தேசபக்தியின் உணர்வைத் தூண்டும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இந்த விழாவை இந்தியா தரப்பில் BSF வீரர்களும் மற்றும் பாகிஸ்தான் தரப்பில் ரேஞ்சர்ஸ் வீரர்களும் முழுமையாக நடத்துகிறார்கள். இந்த விழாவைக் காணும் எவருக்கும் தேசப்பற்று ஊற்றெடுக்கும்.

சகோதரத்தை உணர்த்தும் பரேட்
வாகா எல்லை விழா இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தையும் அன்பையும் புரிந்து கொள்ள உதவுகிறது. இரு தரப்பிலிருந்தும் இராணுவப் படைகள் தங்கள் நாட்டின் கொடிகளை ஒரே நேரத்தில் இறக்கி, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விழாவை நிறைவு செய்கின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டியும் பதட்டமும் ஒருபுறம் இருந்தாலும், சூரியன் மறையும் போது, இரு நாடுகளும் ஒரே மாதிரியான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொள்கின்றன என்பதை உலகிற்கு பறை சாற்றுகிறது. மேலும், இது இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் இதயங்களில் வைத்திருக்கும் அழகான தோழமையை பிரதிபலிக்கிறது.

பார்வையிடுவதற்கான சிறந்த நேரம்
குளிர்கால மாதங்களான, குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வாகா எல்லைக்கு பயணம் செய்ய விரும்பத்தக்க மாதங்கள் ஆகும். குளிர்ந்த காலநிலையில் இந்த விழாவைப் பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாகாவை எப்படி அடைவது?
வாகா-அட்டாரி எல்லையை அடைய, நீங்கள் முதலில் அமிர்தசரஸை அடைய வேண்டும். அவ்வாறு செய்ய மூன்று வழிகள் உள்ளன - விமானம், ரயில் மற்றும் சாலை. ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையம் அமிர்தசரஸிலிருந்து அருகிலுள்ள விமான நிலையமாகும். விமான நிலையத்திலிருந்து முக்கிய நகரத்தை அடைய டாக்ஸிகள் எளிதாக கிடைக்கின்றன. மாற்றாக, சுற்றுலாப் பயணிகள் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அமிர்தசரஸில் உள்ள ரயில்வே சந்திப்புக்கு ரயிலில் பயணம் செய்கிறார்கள். சண்டிகர், டெல்லி, சிம்லா மற்றும் ஜெய்ப்பூர் போன்ற அருகிலுள்ள நகரங்களுடன் இந்த நகரம் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications



