பூட்டிய வீட்டிற்குள், கோவிலுக்குள், வங்கிகளுக்குள், ஏன் ரயில், பேருந்துகளில் கூட கொள்ளையடித்தார்கள். ஆனால், 7,700 அடி உயரத்தில் கொள்ளையடிக்கப்பட்டதை நாம் யாருமே இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டோம். கொள்ளையடிப்பதற்காக மிகவும் கரடு முரடான பாதையில், உயரமான இடத்தில், உயிரை பணயம் வைத்து இவர்கள் கொள்ளையடித்து வந்ததை உலகமே ஆச்சர்யத்தில் பார்த்து வருகிறது!
உலகின் உயரமான இடத்தில் திருட்டு
எதையாவது அடைய வேண்டும் என்று சொன்னால் நாம் எவ்வளவு முயற்சி செய்வோம் என்று நினைத்து பாருங்கள். இங்கே ஒரு திருட்டு கும்பல் தங்கள் உயிரை பணயம் வைத்து குறுகிய பள்ளத்தாக்குகளை கடந்து, கரடு முரடான பாதைகளில் நடந்து, துணிச்சலாக கொள்ளை அடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் பயங்கரமான உயரத்தில் ஏறிய திருடர்கள் குழுவைப் பற்றி இப்போது உலகமே விவாதித்து வருகிறது.

7,700 அடி உயரத்தில் வைக்கப்பட்ட நன்கொடைப் பெட்டி
Viaferrata என்பது சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஏறும் குழுவாகும் (Climbing club). அந்த குழு ஃபேஸ்புக் பக்கத்தில், 2,350 மீட்டர் உயரத்தில் 7,700 அடி உயரத்தில் ஒரு நன்கொடைப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்று குழு பகிர்ந்து கொண்டது. பாதை நிலை 5 என வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் மிகவும் மேம்பட்ட திறன்களைக் கொண்ட ஏறுபவர்கள் மட்டுமே இந்த சவாலான மலைகளை ஏற முடியுமாம்.
உடைந்த நன்கொடைப் பெட்டி
அப்படிப்பட்ட மிகவும் சவாலான மலைகளை ஏறி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். குழு உடைந்த நன்கொடை பெட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளது மற்றும் நன்கொடைப் பெட்டியிலிருந்து சில திருடர்கள் பணத்தை எவ்வாறு திருடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
திறமையான திருடர்கள் கைவரிசை
இலக்கை அடைய, ஒருவர் மிகவும் திறமையானவராகவும், அற்புதமான மலையேறும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும், மேலும் திருடர்கள் பயணத்தை வென்று, பெட்டியை உடைத்து, பணத்தை திருடிச் சென்றது தங்களுக்கு ஆச்சர்யமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏறும் பாதையில் எஃகு கேபிள்கள், கரடுமுரடான பாதைகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகள் உள்ளன. ஆச்சரியம் என்னவென்றால், இந்த திருடர்கள் குழு இந்த பாதையில் தொடர்ந்து சென்று, இவ்வளவு உயரத்தில் உள்ள இடத்தை அடைந்து, பணத்தையும் திருட முடிந்தது மிகவும் சவாலான விஷயமே என்று அவர்கள் கூறுகின்றனர்.
நீண்ட நாட்கள் திட்டமிட்டு செய்த திருட்டு
அத்தகைய பெரிய கடினமான நிலப்பரப்பு மற்றும் கரடு முரடான பாதையில் ஏறுவது நிச்சயம் சாதாரணமான விஷயமே அல்ல. அவர்கள் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே ஏற முடியும். திருட்டைப் பற்றி முதலில் கண்டுபிடித்த மக்கள், திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சிக்கும் முன் சரியாக திட்டமிட்டதாக உணர்கிறார்கள்.
இந்த திறமையை வேறு நல்ல விஷயங்களில் காட்டி இருக்கலாம்
திட்டமிடல் மட்டுமல்ல, திருடர்கள் மலையேறும் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பணத்தை கொள்ளையடிப்பதற்காக அவர்கள் அந்த கனமான கருவிகளைப் பயன்படுத்தி பெட்டியை உடைத்து உடைத்திருக்கலாம்.
எது எப்படியோ திருடர்கள் உண்மையிலேயே மிகவும் திறமை சாலிகள் தான் என்றும் இந்த திறனை அவர்கள் வேறு நல்ல விஷயங்களில் காட்டி இருந்தால் நிச்சயம் நல்ல நிலைக்கு சென்று இருப்பார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications



