Search
  • Follow NativePlanet
Share
» »கண்ணுக்கு தெரியாத மாய நீர்வீழ்ச்சிகள் எங்குள்ளது தெரியுமா?

கண்ணுக்கு தெரியாத மாய நீர்வீழ்ச்சிகள் எங்குள்ளது தெரியுமா?

இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய மனதை கொள்ளையடிக்கும் நீர் வீழ்ச்சிகள்!!

By Bala Latha

நீங்கள் வருகை தரும் வரை இவையெல்லாம் இருக்கிறதா என்று நம்பக் கடினமான இந்தியாவில் உள்ள சில நீர்வீழ்ச்சிகள்
இந்தியாவில் உள்ள சிறந்த மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகளில் சிலவற்றைப் இங்கே பாருங்கள்!

இந்தியா மலைகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள், நதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகிய வடிவங்களில், அழகான இயற்கை வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இங்கே சிறியதும் பெரியதுமாக சுமார் 200க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் இந்தியாவில் இருக்கின்றன. நிறைய மலைவாசஸ்தலங்கள் வழக்கமாக நீர்வீழ்ச்சிகளை அதன் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகக் கொண்டுள்ளன. பெரும்பாலும் அத்தகைய நீர்வீழ்ச்சி விடுமுறை நாட்களில் முக்கிய ஈர்ப்பாக இருக்கிறது. எனினும், அங்கே உள்ள சில மிகுந்த பிரம்மாண்டமானவை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, தூத் சாகர் நீர்வீழ்ச்சி, ஜோக் அருவி, போன்ற முக்கிய நீர்வீழ்ச்சிகள் கம்பீரமாக நின்று, நயாகரா நீர்வீழ்ச்சி, ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சி ஆகியவற்றிற்கு கடும் போட்டியை அளிக்கின்றன. அவை ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களால் அடையாளம் காட்டப்படுகின்றன, ஆனாலும் அவற்றில் சில நிர்வீழ்ச்சிகள் இன்னமும் எடுக்கப்படாத சொர்க்கங்களாக இருக்கின்றன.

கர்நாடகாவில் உள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றி மேலும் படியுங்கள்:

இவற்றில் பெரும்பான்மையானவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த பசுமையான காடுகளின் கூட்டில் இருக்கின்றன. மழைக்காலத்தில், ஜூலை முதல் செப்டம்பர் வரை, நதிகள் நிரம்பியுள்ளன மற்றும் அருவிகள் நீருடன் நிரம்பி வழிகின்றன. நாங்கள் நேரடியாக அந்த அற்புத இடங்களிலிருந்து கண்கவர் அருவிகளின் பட்டியலைத் தேர்ந்தெடுத்து அளிக்கிறோம். இந்த அருவிகளுக்கு பயணம் செய்வது ஒரு சுவாசத்தை கொண்டு செல்லும் அனுபவமாகும் மற்றும் அவை முழு சிறப்புடன் வீழ்வதையும் பாய்வதையும் நீங்கள் பார்க்கும் வரை அவை இருக்கின்றன என்று நம்புவதற்கே கடினமாகும்.

சதோதி அருவி, பெல்காம் :

சதோதி அருவி, பெல்காம் :

அடர்ந்த காடுகளுக்கிடையே இந்த இயற்கை அழகியான சதோதி அருவி கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் எல்லப்புரா நகரில் பாயும் கல்லரமரணே கணவாய்க்கு அருகே அமைந்துள்ள ஒரு கண்களுக்கினிய நீர்வீழ்ச்சியாகும். இது கர்நாடகாவின் சிறிய நயாகரா என்று பொருத்தமாக அழைக்கப்படும் இது கணேஷ்குடி வனத்தொடர்களின் ஒரு பகுதியை உருவாக்குகிறது. பல நீரோடைகள் கல்லமரணே கணவாய்க்கு அருகே குவிகிறது.

15 மீட்டர் உயரத்திலிருந்து விழும் இந்த அருவி நேர்த்தியான நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது மற்றும் காளி நதியின் குறுக்கே கட்டப்பட்ட கொடசல்லி அணையின் உப்பங்கழி முகத்தில் இணைகிறது. மழைக்காலத்திற்கு பிறகு சதோதிக்கு வருவது சிறந்ததாகும். ஏனென்றால் காட்டிற்கு வழிவகுக்கும் சாலைகள் முற்றிலும் ஆபத்தானது. மழைக்கால பருவநிலைகளில் ஆபத்தான அந்த நிலப்பரப்பும் மற்றும் அட்டைப்பூச்சிகளும் அருவியை பயன்படுத்த முடியாததாக ஆக்குகிறது.

நீரை சுற்றிலும் வீசியடித்து விளையாடி மகிழவும், அல்லது குளிக்கவும் அனுமதிக்கப்பட்ட பாறையடி நீச்சல் குளத்தைக் கொண்ட, நாட்டில் உள்ள பல நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். அந்தப் பகுதியில் உணவு விடுதிகளோ அல்லது கடைகளோ இல்லாததால் உணவு மற்றும் சிற்றுண்டிகளை கட்டி எடுத்துச் சென்று விடுங்கள். இந்த இடத்திற்கு பயணம் செய்ய குளிர்காலம் சிறந்த நேரமாகும்.

PC: ஹேமா ப்ரியதர்ஷினி

மகோத் அருவி, எல்லாப்பூர் :

மகோத் அருவி, எல்லாப்பூர் :

மகோத் அருவி எல்லப்புரா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள இதற்கு சதோதி அருவியுடன் சேர்த்து சென்று வரலாம். எல்லப்பூருக்கு செல்ல திட்டமிடும் சுற்றுலா பயணிகள் கையில் நேரம் இருந்தால், மகோத் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மகோத் அருவிக்கும் ஒரு பயணம் மேற்கொண்டு சுற்றிப் பார்த்து வரலாம். இந்த இடம் எல்லாப்பூர் நகரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பெட்தி நதி 650 அடி உயரத்திலிருந்து கீழே வரும் போது முழு வீச்சில் பாய்ந்து மற்றும் இரண்டு அடுக்கு கிளை நதிகளாகப் பிரிந்து இந்த நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது.

சுற்றுலாப் பயணிகள் புகழ்பெற்ற சூரிய அஸ்தமன புள்ளியான ஜெனுகல்லு குட்டாவிற்கு அருகே அமைந்துள்ளதால் இவ்விடத்தை எளிதாக அடையாளம் காணலாம். மகோத் அருவிக்கு வருகை தருபவர்கள் அழகான காட்சிகளுக்கு பெயர் பெற்ற ஜெனுகல்லு குட்டா மற்றும் காவடி கெரி ஆகிய இடங்களையும் கண்டு மகிழலாம். மகோத் அருவிக்கு வருகை புரியும் சுறறுலாப் பயணிகள் மரங்களடர்ந்த கிராமப்புறங்களின் அழகான காட்சிகளைக் கண்டு மகிழ ஒரு வாய்ப்பாகும்.

மகோத் அருவிக்கு போகும் வழியில் சுற்றுலாப் பயணிகள் பசுமைமாறாக் காடுகளுக்கு இடையில் காவடி கெரி என்னும் பெயருடைய அழகான ஏரியை காணலாம். மழைக்கால முடிவும் குளிர்கால தொடக்கமும் இந்த இடத்திற்கு வருகை தர சிறந்த காலமாகும்.
PC: சங்காமா24

ஜோக் நீர்வீழ்ச்சி இயற்கையின் சிறந்த பிரம்மாண்டம் :

ஜோக் நீர்வீழ்ச்சி இயற்கையின் சிறந்த பிரம்மாண்டம் :

இயற்கையின் பிரம்மாண்டத்திற்கு திகைப்பூட்டும் உதாரணமான ஜோக் அருவி இந்தியாவின் மிக உயர்ந்த முழுக்கு நீர்வீழ்ச்சியாகும். அருவியின் முழுமையான அழகை காண உச்சபட்ச மழைக்காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரை வருகை தருமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அருவியின் உண்மையான தொடக்கம் ஷ்ரவதி நதியாகும். ஷ்ரவதி நதி சிறு கிளை நதிகளான ராஜா, ராணி, ரோவர் மற்றும் ராக்கெட் என்ற நான்கு தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் அருவியின் அடிவாரத்தில் தாவி ஏறலாம்.

ஜோக்கின் பளிங்கு போன்ற சிற்றருவித் தொடர்கள்:

இந்த நீர்வீழ்ச்சியின் 830 அடி உயரத்தை பாறைகள் அல்லது இதர இடைத்தடைகளால் தடைபெறாமல் நேரடியாக இறங்கி வரும் சிற்றருவி வீழ்ச்சித் தொடர்களின் நீர்ப்பரப்புகளின் பிரம்மாண்டமான காட்சிகள் பல்லாயிரம் பயணிகளை தன்னை நோக்கி நகர்த்திக்கொண்டு வருகிறது. இந்த காட்சிகளின் அழகு பச்சைப் பசேலென்ற சுற்றுப்புறங்களின் இயற்கை அழகால் மேலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜோக் அருவியின் சிறப்புகளைப் பார்க்க அங்கே பல சௌகரியமான புள்ளிகள் உள்ளன. அருவியின் அடிவாரத்தை அடைவதும் மற்றும் திரும்ப மேலேறுவதும் கடினமானது மற்றும் மலையேற்றம் போன்ற பணியாகும். இது தசைகளை நீட்டி பயிற்சியளிக்க விரும்புபவர்களுக்கு பிரத்தியேகமாக கருதப்படுகிறது.

ஜோக் அருவியை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள் :

ஜோக் அருவிக்கு வருகை தரும் போது லிங்கனமக்கி அணை மற்றும் டப்பே அருவிகள் தவறவிடக் கூடாதவையாகும். ஜோக் நீர்வீழ்ச்சிக்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லிங்கனமக்கி அணை மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஜோக் அருவியை எப்படி அடையலாம்..?

புகழ்பெற்ற சுற்றுலா பயண இலக்காக விளங்கும் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு நல்ல போக்குவரத்து இணைப்புகள் உள்ளன. அருகாமையில் உள்ள நகரம் கர்நாடக மாநிலத்தின் சாகரா ஆகும். சாகரா மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு இடையே நிறைய பேருந்துகள் உள்ளன மேலும் நீங்கள் கர்வார் அல்லது ஹனோவரிலிருந்து கூட ஒரு பேருந்தை எடுத்துச் செல்லலாம்.

ஜோக் நீர்வீழ்ச்சிக்கு வருகை தர சிறந்த காலம் :

ஜோக் அருவியின் மழைக்காலங்களில் நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருப்பதால் அப்போது அங்கு வருவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஜோக்கை சுற்றியுள்ள இதர சுற்றுலா ஈர்ப்பு மையங்கள் ஸ்வர்ணா நதியும் அத்துடன் ஷ்ரவதி பள்ளத்தாக்கும் ஆகும்.


PC: சஜ்ஜாத் எப்

ஹன்பல் அருவி :

ஹன்பல் அருவி :

நீங்கள் ஹாஸனை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப் பார்க்க வந்திருந்தால், சகலேஷ்பூருக்கு அருகிலுள்ள ஹன்பல் அருவிக்கு வருகை தருமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மழைக்காலங்களில் இந்த அருவிக்கு வருகை தருவது சிறந்ததாகும். ஏனென்றால் மழையில்லாத காலங்களில் இங்கு தண்ணீர் சிறு தாரையாக சொட்டிக் கொண்டிருக்கும். அது மிக அதிக உயரத்திலிருந்து வீழ்வதில்லை என்ற போதிலும், நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள இடங்கள் மிகவும் வழுக்கும் தன்மையுடன் இருப்பதால் முன்ஜாக்கிரதைகள் அறிவுறுத்தப்படுகின்றன. நீர்வீழ்ச்சி இருக்கும் அந்தப் பகுதியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பெட்டடா பைரவேஷ்வரா கோயிலுக்கும் நீங்கள் ஒரு பயணம் மேற்கொள்ளலாம்.
PC: ஷரத் சந்திரா

தூத் சாகர் அருவி, பெல்காம் :

தூத் சாகர் அருவி, பெல்காம் :


நீங்கள் ஒரு அழகான நீர்வீழ்ச்சியின் பின்னணியில் இரயில் கடந்து செல்வதைப் போன்ற புகழ்பெற்ற புகைப்படத்தை பார்த்ததுண்டா? மற்றும் இது எந்த அருவி என்று வியந்ததுண்டா? அது வேறெதுவுமல்ல. கர்நாடகா - கோவா எல்லையில் மாண்டோவி நதியில் அமைந்துள்ள நான்கு அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டமான தூத் சாகர் நீர்வீழ்ச்சியாகும். இந்த அருவியானது மேற்குதொடர்ச்சி மலைகளுக்கிடையே உள்ள பகவான் மஹாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இந்த அருவியின் மயக்கும் அழகு உலக அளவில் எண்ணற்ற பயணிகளை ஈர்க்கின்றது.

தூத் சாகர் என்றால் உள்ளூர் கொங்கன்னி மொழியில் பாற்கடல் என்பது இலக்கிய ரீதியான பொருளாகும். பெருகிப்பாயும் பாற்கடல் போல பார்ப்பதற்கு தோற்றமளிப்பதால் அந்தப் பெயரைப் பெற்றது. மழைக்காலங்களில் இந்த நீர்வீழ்ச்சி அதன் உச்சபட்ச வேகத்துடன் பாய்ந்துக் கொண்டிருக்கும். எனவே முங்கும் அருவிப்பாறைக்குள் செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு நீச்சல் உள்ளாடைகளை அணிந்து கொள்வது அத்தியாவசியமாகும்.

மற்ற நீர்வீழ்ச்சிகளைப் போல் அல்லாமல், தூத் சாகர் உதவிகரமான ஊழியர்களுடன் மிக அதிகளவில் ஒழுங்குமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடமாகும். முன்கூட்டியே இங்கு வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் மழைக்காலங்களில் நுழைவுச் சீட்டு கொடுக்கும் இடத்தில் வரிசை மிக நீளமானதாக இருக்கும்.
PC: விநாயக் குல்கர்னி

கோகக் நீர்வீழ்ச்சி :

கோகக் நீர்வீழ்ச்சி :

பேளகவி மாவட்டத்தில் உள்ள கட்டபிரபா நதியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. குதிரைக் குளம்பு வடிவில் உள்ள கோகக் அருவி பாறையடுக்கியலில் உள்ள இடைவெளி ஒத்திசையாமையால் புவியியலாளர்களின் சொர்க்கம் ஆகும். நீர்வீழ்ச்சிக்கு அருகே சாளுக்கிய பாணி கட்டடக்கலையின் நினைவுச்சின்னங்கள் உள்ளன. அருவியுடன் நதியையும் சேர்த்து வியக்கத்தக்க காட்சியை வழங்கும் ஒரு தொங்கும் பாலத்தைக் கொண்டுள்ளது. மேலும் அந்தப் பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் கோகக் கர்டன்ட் என்னும் ஒரு இனிப்பு சுவையுடைய பதார்த்தத்தை சாப்பிடுவதைத் தவற விட்டு விடாதீர்கள்.

PC: ரமணா

 காளஹத்தி அருவி, கெம்மன்னுகுண்டி :

காளஹத்தி அருவி, கெம்மன்னுகுண்டி :

கெம்மன்னகுடிக்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் காளஹத்தி அருவிகளுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். இந்த அருவி சிக்மங்களூரில் உள்ள கெம்மன்னகுடி மலைவாசஸ்தலத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 122 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து விழும் காளஹத்தி அருவிகள் மற்றபடி காளஹஸ்தி அருவிகள் என்றும் மற்றும் காளத்திகிரி அருவிகள் என்றும் அறியப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் கூற்றின்படி அகஸ்திய முனிவர் இந்த காளஹத்தி அருவிகளுடன் தொடர்புடையவர்.
அருவிக்கு அண்மையில், வலது பக்க வெளியில் விஜயநகர சாம்ராஜ்ஜிய காலத்திய வீரபத்ரா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் நுழைவாயில் மூன்று யானை கற்சிலைகளால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாத காலங்களில் மிகப் பெரும் எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் இந்த கோயிலில் ஆண்டுவிழா கொண்டாடுவதைக் காணலாம்.

இந்த வருடாந்திர கொண்டாட்டம் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருவராலும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் இந்தக் கோயிலில் கூட்டம் நிரம்பி வழியும். தொடர்ச்சியாக இந்த இடம், சோப்புகள், சிற்றுண்டிகள், உடைகள் போன்றவற்றால் அசுத்தப்படுத்தப்படுவதால், சுத்தமான நீரை ரசித்து அனுபவித்து மகிழ, மழையற்ற காலங்களில் இந்த இடத்திற்கு வருகை தருவது சிறந்ததாகும். புகழ்பெற்ற முல்லயங்கிரி சிகரம் இங்கிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பத்திரிகையாளர் மரியாதை: திருகா.யாத்திரிகா

அப்ஸரகொண்டா அருவிகள்:

அப்ஸரகொண்டா அருவிகள்:

ஹொன்னாவர் வழியாக வடக்கு கர்நாடகத்தில் நீங்கள் பயணம் செய்து கொண்டிருந்தால் அப்ஸரகொண்டா அருவியை தவற விடாதீர்கள். தேவதைகள் இங்கு நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்றும் அதனால் தான் அப்ஸரகொண்டா என்று பெயர் பெற்றது எனவும் புராணக்கதைகள் கூறுகின்றன. நீர்வீழ்ச்சிக்குப் பின்புறம் சிறிதளவு தொலைவில் ஒரு கடற்கரை உள்ளது. அப்ஸரகொண்டா குன்றின் காட்சிக் கோணம் அருவியிலிருந்து சிறிதளவு தொலைவிலேயே உள்ளது மேலும் அரபிக்கடல் மற்றும் கடற்கரை சுவாசத்தைக் கொண்டு செல்லும் சில காட்சிகளை அளிக்கிறது. நீர்வீழ்ச்சிக்கு அருகே பாண்டவா குகைகள் என்றழைக்கப்படும் மாபெரும் குகைகள் அமைந்துள்ளன - பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட போது இந்தக் குகைகளில் தங்கியதாக நம்பப்படுகிறது.

அரிஷினகுண்டி அருவி:

அரிஷினகுண்டி அருவி:

அரிஷினகுண்டி அருவிகள் கொல்லூருக்கு அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள கண்கவர் நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். அருவியை அடைய நீங்கள் மலையேற்றப் பயணத்தைத் தொடங்க வேண்டும் மற்றும் மலையேற்றத்தின் தொடக்கப்புள்ளி மிகவும் புகழ் வாய்ந்த கொல்லூர் மூகாம்பிகா கோயிலாகும். சுமார் 4.5 கிலோ மீட்டர் மலையேற்றத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் உழைப்பின் கனியை அடைய முடியும் (அதாவது., நீர்வீழ்ச்சியை). நீங்கள் மேற்கொண்டு மேலேறி முன்னேறினால், கொடசத்ரி சிகரத்தை அடைய முடியும். கன்னடத்தில் அரிஷினகுண்டி என்றால் "மஞ்சள் ஏரி" என்று பொருள். மேலும் இங்குள்ள நீர்வீழ்ச்சியின் குளத்தில் நீந்துதல் புத்திளமை பலனை உங்கள் உடலில் விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது.


பத்திரிகையாளர் மரியாதை: சுமேஷ்

பண்டாஜே அர்பி அருவி

பண்டாஜே அர்பி அருவி


தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் சார்முடி மலைத்தொடரில் அமைந்துள்ள பண்டாஜே அருவி சென்றடைவதற்கு ஒரு நீண்ட மலையேற்றம் தேவைப்படும் மற்றுமொரு நீர்வீழ்ச்சியாகும். அடர்ந்த காடுகளில் ஒருவர் எளிதாக தொலைந்து போகும் வாய்ப்புகள் உள்ளதால் வழிகாட்டிகளின் சேவையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த மலையேற்றம் முற்றிலும் நெடியது மற்றும் குழந்தைகள் அல்லது முதியவர்களுடன் பயணம் செய்வதாக இருந்தால் மிகவும் கடினமானதாக இருக்கும். பல்லலராயனா துர்கா கோட்டை அண்மையில் உள்ளது மற்றும் இது அருவியிலிருந்து கிட்டத்தட்ட 2 மணி நேர மலையேற்றமாகும்.
பத்திரிகையாளர் மரியாதை: ஸ்ரீகாந்த்

ஹிட்லுமானே அருவி, கோடசத்ரி :

ஹிட்லுமானே அருவி, கோடசத்ரி :

சுற்றுலாப் பயணிகள் கோடசத்ரிக்கு பயணம் மேற்கொள்ளும் போது வழியில் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான ஹிட்லுமானே அருவிக்கு கண்டிப்பாக வருகை தரவேண்டுமென்று பரிந்துரைக்கிறோம். மயக்கும் ஹிட்லுமனே அருவிகள் ஷிமோகா மாவட்டம் கோடசத்ரி குன்றுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அருவித்தொடராகும். இந்த அருவி நிட்டூருவிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டரும் ஹோஸநகராவிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பச்சைப் பசேலென்ற மரங்களால் சூழப்பட்ட பாறை மலைகள் வழியாக அருவியை அடையலாம். பயணிகள் நிட்டூர் வழியாக செல்லும் ஜீப் தடப் பாதையையும் தேர்ந்தெடுக்கலாம். ஹிட்லுமானே அருவிக்குச் செல்லும் மலையேற்ற சுற்றுவழி சாகசங்கள் நிறைந்த அதிக செங்குத்தான குன்றுகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த இடமாகும். கோடசத்ரி சிகரம், ஹிட்லுமானே அருவியிலிருந்து மலையேற்ற தூரம் பச்சைப் பசேலென்ற அழகுடையது. இங்கு தவறவிடக்கூடாஷத இதர ஈர்ப்புகள் மூகாம்பிகா தேசிய பூங்கா மற்றும் மூகாம்பிகா கோயிலாகும்.
பத்திரிகையாளர் மரியாதை: தினேஷ் வால்கே

பர்கானா அருவிகள், அகும்பே :

பர்கானா அருவிகள், அகும்பே :

பர்கானனா அருவி, இந்தியாவின் மிக உயர்ந்த அருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் உயரம் 850 அடியாகும். இந்த நீர்வீழ்ச்சி ஷிமோகா மாவட்டத்தில் அகும்பேவிலிருந்து வெறும் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இதன் தொடக்கம் இந்த பிரதேசத்தில் பாயும் சீதா நதியாகும். யாரெல்லாம் அகும்பேவிற்கு வருகை தருகிறார்களோ அவர்களெல்லாம் ‘கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில்' ஒன்றாக எண்ணப்படுகிறது.

இந்த அருவியின் பெயர் ‘பர்கா' என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயரானது இந்த பிரதேசத்தில் வசிக்கும் சுட்டிமானை குறிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த அருவியை அடைய மேற்குதொடர்ச்சி மலையிலிருந்து கும்போ மலைத்தொடர் வழியாக ஒரு செங்குத்தான மலையேற்றத்தை மேற்கொள்வது அவசியமாகிறது. மேலும், மோட்டார் பைக்கில் நீர்வீழ்ச்சிக்கு செல்ல விருப்பமுள்ள சுற்றுலாப் பயணிகள் பர்கானா அருவியை அடையும் வாகனங்கள் செல்லும் சாலை வழியை பயன்படுத்திக் கொள்ளலாம். மலைச்சரிவுகள் முற்றிலும் செங்குத்தாக இருப்பதால் அருவிக்கு செல்லும் மலையேற்றம் மிகவும் அபாயகரமானது. இருப்பினும், பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சிகளும், மற்றும் நீர்வீழ்ச்சியின் அழகும் சோர்வூட்டும் மலையேற்றத்தை மதிப்புடையதாக்குகின்றன.

அருவிக்கு வருகை தர சிறந்த காலம் ஆரம்ப குளிர்காலமாகும். சுற்றுலாப் பயணிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மலைச்சரிவுகளின் மயக்கும் அழகான காட்சிகளை அருவிக்கு அண்மையில் அமைந்துள்ள பர்கானா காட்சிக் கோணத்திலிருந்து கண்டு மகிழலாம். இந்த அருவி மேற்கு மலைத்தொடர் காடுகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் மூங்கிலிலிருந்து மூலிகைகள் வரை பரந்த பல்வேறு தாவரங்களால் நிரம்பியுள்ளது. இந்த அருவியைத் தவிர்த்து காட்டின் மற்றொரு முக்கிய ஈர்ப்பு குருஜி என்னும் மலராகும். இந்தத் தாவரம் 7 வருடங்களுக்கு ஒருமுறை செழித்து மலர்ச்சியடையும். இது வறட்சியின் தொடக்கத்தை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

கூட்லு தீர்த்தா அருவிகள், அகும்பே :

கூட்லு தீர்த்தா அருவிகள், அகும்பே :

கூட்லு தீர்த்தா அருவி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மத்தியில் அமைந்துள்ள மிகுந்த அழகான கண்ணுக்கினிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். ஹெப்ரிக்கு அருகிலுள்ள உடுப்பியிலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது அகும்பேவிற்கு அல்லது ஷிமோகா மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ள அழகான ஒரு அருவியாகும்.

சீதா நதியின் மூலாதாரமாக அறியப்படும் இந்த நீர்வீழ்ச்சி 126 அடி உயரத்திலிருந்து குளத்தில் விழுகிறது.
சுற்றுலாப் பயணிகள் சுமார் 3 முதல் 4 கிலோ மீட்டர் மலையேற்றத்திற்குப் பிறகு இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தரலாம். நிறைய முனிவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை தவம் செய்ய பயன்படுத்தியதால் இந்தக் குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி பெரும்பாலும் தனித்துள்ளதால் வழிகாட்டிகளின் சேவையைப் பெறுவது அறிவுடைமை ஆகும். மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளைப் போலவே இதற்கும் காட்டு வழியே மலையேற்றம் செய்ய வேண்டி இருப்பதால், இதுவும் அட்டைப் பூச்சிகளால் மொய்க்கப்பட்டிருக்கிறது எனவே அட்டைப்பூச்சிகளை அகற்றி சுத்தம் செய்ய உங்களுடன் உப்பை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X