கோதிக் கட்டிடக்கலை பாணியானது பிரான்சில் 12ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட, 16ஆம் நூற்றாண்டு வரை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது. இவ்விடமானது ஐரோப்பியாவில் பரந்து விரிந்து, பிரதானமாக தேவாலய கட்டிடங்களுக்கும், தேவாலயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. கோதிக் கட்டிடக்கலையின் காவிய பண்புகள் என நீண்ட பெட்டகம், கல் அமைப்புகள் மற்றும் குறிப்பிடப்பட்ட நுழைவாயில் என காணப்படுகிறது. அரண்மனைகள், நகர மண்டபம், கோட்டை மற்றும் பிற மாபெரும் அமைப்புகளுமென சில சமயங்களில் இந்த கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடக்கலை வடிவமானது ஐரோப்பியாவில் தனித்துவம் கொண்டு காணப்பட, ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவை வந்து சேர்ந்தது. கிருஸ்துவ மதமானது கி.பி.52இல் அறிமுகப்படுத்தப்பட, தேவாலயங்கள் மற்றும் இந்தியாவின் கதீட்ரல்களின் கட்டடமானது இதன் வடிவத்தில் கட்டப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, பல அமைப்புகளானது உயர எழுந்து, இன்று வரை வலிமையுடன் நிற்கிறது. கோதிக் கட்டிடக்கலையை காண மனம் களிப்படைய, இந்த கிருஸ்துமஸில் இத்தகைய தேவாலயம் நோக்கி நாம் பயணம் செய்திடலாமே.

சைன்ட் பிலோமினா தேவாலயம், மைசூரு:
1936ஆம் ஆண்டு நியோ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட சைன்ட் பிலோமினா தேவாலயம், ஆசியாவிலேயே மிக உயரமான மற்றும் அதிக பார்வையாளர்களை கொண்ட தேவாலயங்களுள் ஒன்றும் கூட... இந்த தேவாலயமானது இரு கூரை கொண்டிருக்க, 175அடி உயரமும் கொண்டு, கொலோன் கதீட்ரலை ஒத்த அழகுடன் காண, ஜெர்மனியின் புகழ்மிக்க தேவாலயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேவாலயமானது சைன்ட் பிலோமினாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட, இவர் தான் தேவாலய துறவி மற்றும் ரொமானிய தேவாலய தியாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடமானது மைசூருவின் முக்கிய அடையாள இடங்களுள் ஒன்றும் என தெரியவருகிறது.
PC: Bikashrd

சைன்ட் தாமஸ் பெஸிலிகா தேவாலயம், சென்னை:
இதனை ‘சான் தோம் பெஸிலிகா' எனவும் அழைக்கப்பட, 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது இவ்விடம் எனவும் தெரியவருகிறது. உலகில் காணும் மூன்று தேவாலயங்களுள் ஒன்றாக, ஏசுவின் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களுள் ஒன்றான கல்லறையாக விளங்க, இதனை சைன்ட் தாமஸ் எனவும் அழைக்கப்படுகிறது. மற்ற இரு தேவாலயங்களாக வாட்டிகன் நகரத்திலும், ஸ்பைனிலும் இதே அமைப்பை ஒத்து காணப்படுகிறது.
இந்த தேவாலயமானது 1893ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மீண்டும் கட்டப்பட, தற்போது நாம் காணும் வடிவம் தான் அது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேவாலயமானது ரொமானிய கத்தோலிக் மைனர் பெஸிலிகாவை கொண்டு உயரிய கூருடன் காணப்பட, நிற கண்ணாடிகள், மற்றும் அருங்காட்சியகம் என சைன்ட் தாமஸ் தொடர்பான தொல்பொருளுடனும் காணப்படுகிறது.
PC: PlaneMad

சைன்ட் பௌல் தேவாலயம், கொல்கத்தா:
தேவாலயத்தின் தலைச்சிறந்த எடுத்துக்காட்டுகளுக்கு ஒன்றாக கோதிக் கட்டிடக்கலையுடன் கொல்கத்தாவில் காணப்படும் ஓர் தேவாலயம் தான் சைன்ட் பௌல் தேவாலயமாகும். இந்த இடமானது 1839இல் தீட்டப்பட, இதன் கட்டமைப்பு 1847ஆம் ஆண்டு முடிவுற்றது. இவ்விடமானது விக்டோரிய நினைவிடத்தை நெருங்க சௌரிங்கீ சாலையில் காணப்படுகிறது.
இவ்விடமானது மறு உருவாக்கப் பணிக்கு உட்படுத்தப்பட, இந்தோ - கோதிக் கட்டிடக்கலை பாணியில் இதனை கட்டிட, 1934ஆம் ஆண்டு நில அதிர்வினால் பாதிக்கவும்பட்டது. இந்த தேவாலயமானது 201 அடி மைய கூரைக்கொண்டிருக்க, 5 கடிகாரத்தையும், 3 டன் எடையையும் ஒவ்வொன்றும் கொண்டு, சிக்கலான விரிவு வடிவத்தைக்கொண்டு நிற கண்ணாடிகளாலும், பிளாஸ்டிக் கலை வடிவத்தையும் கொண்டு உள் புறமானது காட்சியளிக்கிறது.
PC: Ankitesh Jha

மௌன்ட் மேரி தேவாலயம், மும்பை:
இதனை நம் பெண்ணான பெஸிலிகாவின் சிகரமென அழைக்கப்பட, இந்த மௌன்ட் மேரி தேவாலயமானது மும்பையின் பந்த்ராவில் காணப்படுகிறது. இந்த தேவாலயமானது ஈர்க்கப்படும் முக்கிய தேவாலயங்களுள் ஒன்றாக விளங்க, பந்த்ரா விழாவின் போது இங்கே களைக்கட்டிட, வாரம் முழுக்க செல்லும் கொண்டாட்டமானது, தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோரை கொண்டும் இருக்கிறது.
பந்த்ரா விழாவானது ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மேரிக்கு விருந்து படைக்க, இந்த விழாவானது முதல் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 8க்கு பிறகு ஒவ்வொரு வருடம் காணப்படுகிறது. இந்த ரொமானிய கத்தோலிக் பெஸிலிகாவானது 262 அடி உயரத்தில் கடல் மட்டத்திலிருந்து அமைந்திருக்க, விழாவின் போது அழகைக்கொண்டு இந்த தேவாலயமானது காட்சிகளால் அரவணைக்கவும்படுகிறது.
PC: Rakesh Krishna Kumar

அனைத்து துறவிகள் தேவாலயம், அலகாபாத்:
உள்ளூர் வாசிகளால் புகழ்மிக்க பத்தர் கிர்ஜா என இவ்விடத்தை அழைக்கப்பட, அதற்கு அர்த்தமாக "கற்களால் ஆன தேவாலயம்" எனவும் பொருள்தர, அனைத்து துறவிகள் தேவாலயமானது அற்புதமான அமைப்பை கொண்டு அலகாபாத்தில் காணப்படுகிறது. இந்த புகழ்மிக்க அற்புதமான தேவாலயத்தினை சார் வில்லியம் எமெர்சன் என்பவர் நிறுவிட, இவர் தான் புகழ்மிக்க விக்டோரியா நினைவிடத்தை கொல்கத்தாவில் வடிவமைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கே அனைத்து துறவிகள் நாளானது நவம்பர் 1ஆம் தேதி வருடா வருடம் தேவாலயத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விடமானது அழகிய கட்டிடக்கலைக்கொண்டு இந்திய காலனித்துவத்துடன் மிளிர்கிறது. இந்த தேவாலயமானது போதுமான அளவில் காணப்பட, 300 முதல் 400 மக்கள் வரை கூடமுடியும் என்பதோடு, மத்தியில் பசுமையை கொண்டிருக்கிறது.
PC: Picea Abies



Click it and Unblock the Notifications





