பல பாரம்பரிய, கலாச்சார, இயற்கை சுற்றுலாத் தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட இந்தியாவின் தாஜ்மஹால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் விட விசேஷமானது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் தாஜ்மஹால் 'உலகின் மிகவும் இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட கலாச்சார பாரம்பரிய தளமாக' இப்போது மாறியுள்ளது!

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று - தாஜ்மஹால்
32 மில்லியன் ரூபாய் செலவில், 1632-1653 ஆண்டு கால கட்டத்தில், நுட்பமான வேலைகளை கொண்டு கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. பல சிறப்புகள் அடங்கிய தாஜ்மஹால் 2007 ஆம் ஆண்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் தாஜ்மஹாலைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் முதலிடம் பிடித்த தாஜ்மஹால்
இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் எங்கு சென்றாலும், இன்ஸ்டாகிராமில் ஹேஷ்டேக் போட்டு நமது போட்டோவை பதிவிடுகிறோம். அந்த வகையில் ஒரு ஹேஷ்டேக் ஆய்வில், 'காதல் நினைவுச்சின்னம்' 2.4 மில்லியனுக்கும் அதிகமான ஹேஷ்டேக்குகளைப் பெற்றுள்ளது. இதுதான் ஒரு நினைவுச்சின்னத்திற்கு உலக அளவில் அதிகமாக வந்த ஹேஷ்டேக் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவின் பெருமைமிகு தாஜ்மஹால் உலக அளவில் முதலிடம் பிடித்த கலாச்சார நினைவுச்சின்னமாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை மூன்றாவது இடம்
பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை உள்ளது. 2,256,202 மில்லியன் ஹேஷ்டேக்குகளுடன் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே மச்சு பிச்சு மற்றும் பெட்ரா ஜோர்டன் எடுத்துள்ளது. கிராண்ட் கேன்யன், அமல்ஃபி கடற்கரை, இஸ்தான்புல் கொலோசியம், மற்றும் ட்ரெவி நீரூற்று ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தாஜ்மஹால் பற்றி நாம் அறியாத விஷயங்கள்
1. தாஜ்மஹால் கட்டுமானத்தில் இந்தியா மற்றும் ஆசியா முழுவதிலும் இருந்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல 1,000 யானைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2. மினாரட்டுகள் எனப்படும் நான்கு தூண்கள் நேராக நிற்காமல் வெளிப்புறமாக சாய்ந்திருக்கும். நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், பிரதான கல்லறை (கும்பத்) மீது மினாராக்கள் விழுந்து சேதமடையாமல் பாதுகாப்பதற்காக இது அவ்வாறு கட்டப்பட்டதாம்.
3. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமிய வடிவமைப்பு பாரம்பரியத்தின் கலவையாக தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
4. தாஜ்மஹாலின் சுவர்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் பெரும்பாலும் புனித நூலான குர்ஆன் ஷெரீப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.
5. தாஜ்மஹால் கட்ட பயன்படுத்தப்பட்ட பளிங்கு கற்கள் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் நாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. அவற்றில் சீனா, திபெத், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும்.
6. தாஜ்மஹாலின் அசல் தோட்டத்தில் ஏராளமான டாஃபோடில்ஸ், ரோஜாக்கள் மற்றும் பழ மரங்கள் இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் அவை அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
7. தாஜ்மஹாலில் உள்ள விளக்கில் கர்சன் பிரபுவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 கிலோ எடையுள்ள இந்த அழகான விளக்கு தாமிரத்தால் ஆனது.
8. கல்லறையில் அல்லாஹ்வின் 99 வெவ்வேறு பெயர்கள் எழுத்துக்கள் கல்வெட்டுகளாக உள்ளன.
9. ஷாஜகானின் மற்ற மனைவிகள் மற்றும் விருப்பமான வேலைக்காரர்கள் கல்லறைகளில் (தாஜ்மஹாலுக்கு வெளியே ஆனால் அதே வளாகத்தில்) அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
10. இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, கல்லறைகள் அலங்கரிக்கப்படக்கூடாது. ஷாஜஹானும் அவரது மனைவி மும்தாஜும் தாஜ்மஹாலின் உள் அறைக்கு அடியில் ஒரு வெற்றுக் கல்லறையில் புதைக்கப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
11. தாஜ் ஒளியின் அளவு மற்றும் நேரத்தைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றுகிறது. அர்த்தத்தில், தாஜ் காலையில் இளஞ்சிவப்பு நிறமாகவும், மாலையில் பால் வெள்ளையாகவும், நிலவொளியில் தங்க நிறமாகவும் தோன்றும்.
12. இத்தகைய நினைவுச்சின்னம் மீண்டும் கட்டப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தாஜ்மஹாலை கட்டிய கைவினைஞர்களின் கைகள் துண்டிப்பட்டுவிட்டன என்று கூறப்படுகிறது.
நீங்கள் உங்கள் எப்போதாவது தாஜ்மஹாலுக்கு சென்றது உண்டா? உங்களுடைய அனுபவம் என்ன?



Click it and Unblock the Notifications




